Monday, June 30, 2014

சிறப்புமிகு சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம்

சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் 30-06-2014 அன்று சிவகாசி தொலை பேசி நிலைய வளாகத்தில் தோழர்கள் அழகுராஜ் மற்றும் முனீஸ்வரன் கூட்டு தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது . விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழாவை 30-08-2014 அன்று சிவகாசியில் நடத்துவது. சிறப்புரையாக தோழர் V  வெங்கட்ராமன் , மாநில துணை தலைவர் , தோழியர் V  P  இந்திரா , மாநில உதவி செயலர் , தோழர் லக்ஷ்மண பெருமாள் , தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியோரை அழைப்பது என முடிவு எடுக்கப்பட்டது .இதற்கு மாநில செயலரின் ஒப்புதலும் பெறப்பட்டது . மாநில செயற்குழு முடிவுகளையும் , விளக்கி மாவட்ட செயலர் விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் ஸ்தல மட்ட பிரச்சனைகளை நாம் கையாண்ட விதம் பற்றி எடுத்துரைத்தார் . பிரச்சனைகளை தோழர் ராஜு ,ராஜையா , செல்வராஜூ ஆகியோர்  எடுத்துரைத்தனர் . தோழர் இன்பராஜ் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் முடிந்தது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...