Monday, November 27, 2017

எழுச்சியுடன் நடைபெற்ற அருப்புக்கோட்டை கிளை கூட்டம்

         இன்று மாலை கிளை தலைவர் தோழர் U. B. உதயகுமார் தலைமையில் அருப்புக்கோட்டை கிளை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கிளைகூட்டத்தை முறையாக மாவட்ட செயலர்ர வீந்திரன் துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார். வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழாவுடன் இணைந்து  நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை பற்றியும், வர உள்ள 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டிய அவசியத்தை பற்றியும் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார். மனித சங்கிலி  இயக்கத்தில் பெருவாரியாக கலந்து கொண்ட கிளைக்கு மாவட்ட சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்தார். அதன் பின் மாவட்ட தலைவர் தோழர் R. ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் டெல்லி  பேரணியை பற்றி விரிவாக பேசினர். டெல்லி பேரணியில் பங்கேற்ற தோழர்கள் A. சோலை, கிளை செயலர் மற்றும் தோழர் A. அய்யனார் இருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
          அதன் பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில்  தோழர் S.சந்திரசேகரன் அவர்கள் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களால் பாராட்டு பெற்றார் .அவரை வாழ்த்தி மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர் தோழர் A .கண்ணன் ,தோழர்கள் அஷ்ரப் தீன் ,TNTCWU மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ஆகியோர் பாராட்டி பேசினர். ஏற்புரையை நெகிழ்ச்சியுடன் நிகழ்த்திய தோழர் சந்திரசேகரன் நமது BSNLEU சங்க செயல்பாட்டை நினைவு கூர்ந்தார்.


















கருத்தரங்கம் - விரிவடைந்த செயற்குழு - பாராட்டுவிழா

அனைவரையும் வரவேற்கிறோம்

Thursday, November 23, 2017

மனித சங்கிலி போராட்டம்

ஒற்றுமையில் உருவான பிரமிக்கத்தக்க மனித சங்கிலி போராட்டம் 
புதிய டவர் நிறுவனத்தை உருவாக்கி BSNL நிறுவனத்தை தனியார் மயப்படுத்திட நினைக்கும் நடுவண் அரசை கண்டித்தும் 01/01/2017 முதல் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மனித சங்கிலி நிகழ்வுகள்.முன்னதாக மாவட்ட பொது மேலாளர்  அலுவலகத்தில் மாலை 3  மணிக்கு நடைபெற்ற கூட்டத்திற்கு NFTE மாவட்ட செயலர் தோழர்  ராமசேகர்  வகிக்க ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி மற்றும் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,SNEA மாநில  சங்க நிர்வாகி சந்திரசேகரன் ,AIGETOA மாநில  சங்க நிர்வாகி விக்டர் சாம்சன்  சேவா BSNL மணிலா சங்க நிர்வாகி சகோதரர் .R பிரேம்குமார் ஆகியோர் பேசினர் .பின்னர் மதுரை ரோட்டில் நடைபெற்ற மனித  சங்கிலி போராட்டத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமசாமி துவக்கி வைத்தார் .மாவட்ட முழுவதும் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ,அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள் ,ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர் .நமது TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் மற்றும் AIDBPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்றனர் .
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 6 people, people smiling, people sitting, crowd and outdoor
Image may contain: 2 people, people standing, crowd, wedding, tree and outdoor
Image may contain: 1 person, standing, crowd, tree, wedding and outdoor
Image may contain: 3 people, people standing, crowd, tree and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, tree, outdoor and nature
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, tree, sky and outdoor
Image may contain: one or more people, sky, tree, basketball court and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...