Wednesday, April 30, 2014

ஏப்ரல் 30 ஹிட்லர் தற்கொலையும் அதன் தொடர்ச்சியான மே முதல் நாளும்

கோயபல்சும் ஹிட்லரும்
குடும்பத்தாருடன் கோயபல்ஸ்
          பெர்லினை சோவியத் படைகள் சுற்றிவளைத்திருந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு உயில் எழுதிய ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ல் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இருவருடைய உடலையும் வெளியில் யாருக்கும் தெரியாதவகையில் ஹிட்லரின் கொ.ப.செ. கோயபல்ஸ் எரித்துவிட்டார். பருத்தி வீரன் ஸ்டைலில் காணாப் பிணமாக்கி விட்டார்.
          பெர்லினில் 1945 மே1ல் வெற்றியின் அடையாளமாக சோவியத் கொடியேற்றப்பட்டது. ஜெர்மன் வானொலி ஹிட்லர் இறந்ததாக அறிவித்தது. இதே நாளில் உலகம் முழுவதிற்கும் இன்றுவரையில் தன் பொய்களால் போற்றப்படும் கோயபல்ஸ் தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
          ஏறக்குறைய முசோலினி மற்றும் ஹிட்லரின் மரனத்துடன் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்து விட்டது. முத்து துறைமுகத் தாக்குதலுக்கான பழிதீர்த்தல் என்றபெயரில் நடத்தப்பெற்ற அமெரிக்காவின் ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதல் என்பது அத்துமீறல்தான்.

மேதின சூளுரை

       
          "பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமை கூட மறுக்கப்படுகிறது. ஆளும் அரசுகள் உள்நாட்டு தொழிலாளர்களை விட பன்னாட்டு முதலாளிகளுக்கே ஆதரவாக உள்ளன. சட்ட, சமூக பாதுகாப்பு எதுவுமில்லாத முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக அநீதிகளை சாய்த்து சமநீதியை உறுதிசெய்வோம். இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த மேதின நன்னாளில் சூளுரைப்போம்."
---------Com. G .R

3ஜி ரோமிங் தடை நீக்கம்

மூன்றாம் தலைமுறைக்கான 3ஜி சேவை வழங்கிவரும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், நாட்டில் சில தொலை தொடர்பு வட்டங்களில் மட்டும் உரிமம் பெற்றுக் கொண்டு, உரிமம் பெறாத வட்டங்களில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ரோமிங் சேவை வழங்கின. இதற்கு அரசு தடை விதித்த நிலையில், இந்த தடையை தொலை தொடர்பு ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
                                <நன்றி :- தினகரன் >

மத்திய சங்க சுற்றறிக்கையும் ஒரு சில செய்திகளும்,

மாநில சங்க சுற்றறிக்கை எண் 128 படிக்க :- Click Here

பணி ஓய்வு

           இன்று பணி ஓய்வு பெறும் நமது ஸ்ரீவில்லிபுத்தூர்  கிளை தோழர் G .பாண்டி அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க விருதுநகர் மாவட்ட சங்கத்தின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் !

Tuesday, April 29, 2014

ஏப்ரல் 29ல் ஹிட்லர்

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. ஹிட்லர் பெர்லின் நகர சுரங்கத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய நீண்டநாள் காதலி ஈவாபிரவுனும் தங்கியிருந்தார்.

ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள் ஏப்ரல் 28 இரவு அதாவது 29ஆம் தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் 29 விடிகாலைவரை நடந்தன. 29ஆம் தேதி திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஹிட்லர் உயிலும் எழுதினார்.

ஏப்ரல் 29 - பாரதிதாசன் பிறந்தநாள்

படம் : புகழேந்தி
தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள் 
சோற்றிலே மண்போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி

நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த 
கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

(தளை அறு என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய பாடலின் இரண்டு பத்திகள் மட்டும்)

Monday, April 28, 2014

தடைகள் இல்லாமல் கொள்ளையடிக்க அனுமதிக்கும் புது அரசை எதிர்பார்த்து

தடைகள் இல்லாமல் கொள்ளையடிக்க அனுமதிக்கும் புது அரசை எதிர்பார்த்து அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பு
       இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மூன்று மாதங்களில் 1,000 கோடி டாலரைத் தொட்டுள்ளது. மத்தியில் நிலையான அரசு அமையும் என்றும், அந்த அரசு புதிய சீர்திருத்தங்களை அதிலும் குறிப்பாக(தனியார்மய ,தாராளமய,உலகமய கொள்கைகளை )வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் முதலீடு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 28 - ஃபாசிஸ்ட் முசோலினி இறந்தநாள்

























            பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922க்குப்பின் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கிப் பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டார். சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப்போரில் நுழைந்ததன் வழியாக நாசிப்படைகளின் கூட்டு தோல்வியைத் தழுவியது.

         ஏப்ரல் 1945 ஏப்ல் 28ல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் (உள்நாட்டு எதிர்ப்புப் படையாகச் செயல்பட்டவர்கள்) அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் ஏறக்குறைய அதன் முடிவை நெருங்கியிருந்தது.

Sunday, April 27, 2014

சிவகாசியில் "பைபர் டூ தி ஹோம்'; பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

            பி.எஸ்.என்.எல்., சார்பில்,சிவகாசியில் ,அதிவேக இன்டர் புதிய சேவையாக, "பைபர் டூ தி ஹோம்' அறிமுகம் செய்துள்ளனர்.தொலை தொடர்பு துறையில், காலத்திற்கு ஏற்ப, புதிய தொழில் நுட்பங்கள் எது வந்தாலும், தொழில் நகரான சிவகாசியில் அறிமுகம் செய்வது வாடிக்கை. கடந்த ஆண்டுகளில் 3ஜி சேவை ,மாவட்டத்திலே முதன்முறையாக சிவகாசி, விருதுநகரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது புதிய தொழில் நுட்பத்திலான "பைபர் டூ தி ஹோம்' என்ற அதிவேக இன்டர்நெட் சேவை, மாவட்டத்திலேயே முதன்முறையாக, சிவகாசியில் அறிமுகம் செய்துள்ளது, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம். தற்போது பி.எஸ்.என்.எல்., இன்டர் நெட் சேவை, காப்பர் கேபிள் மூலம் டெலிபோன் இணைப்புகளுடன் சேர்ந்து வழங்கப்படுகிறது. இதில், 24 எம்.பி.எஸ்., (மெகாபிட் பெர் செகண்ட்) என்ற அளவில், கிடைக்கிறது. அதிலும், தொடர்பு நிலையம் சுற்றி, 500 மீட்டர் சுற்றளவில் தான், இந்த 24 எம்.பி.எஸ்.,அளவு நெட் வசதி கிடைக்கும். அதற்கு மேல், அளவு குறைந்து, நீண்ட தூரத்தில் உள்ள நெட் இணைப்புகளுக்கு, 8 எம்.பி.எஸ்., அளவுகளில் கிடைக்கிறது. மேலும், காப்பர் வயர்கள் பழுதடைவதும், அதை சரி செய்ய ஒட்டுப்போடுவது போன்ற காரணங்களால், அதிவேக சேவை வழங்கமுடியாத நிலை உருவானது.
          சிவகாசியில் உள்ள பல பிரின்டிங் ஆப்செட்களுக்கும், பட்டாசு நிறுவனங்களுக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை மிக அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு, ஒரு வினாடியில், 100 மெகாபிட்ஸ் பதிவிறக்கம் செய்யும் வகையில், ஆப்டிக்கல் பைபர் மூலம், அதிவேக இன்டர்நெட் சேவையை, ஏப்ரல் முதல் பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. ஹையர் பிராட்பாண்ட் சேவை பயன்படுத்தும்,அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பார்ட் மென்ட்களில் வசிப்போர், கல்வி நிறுவனங்கள், இச் சேவை பெறலாம். ஒரு ஆப்டிக்கல் பைபரில், 16, 32 இணைப்புகள் வழங்கலாம். இதற்காக, சிவகாசி பகுதியில், ஆப்டிக்கல் பைபர் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10, 20, 50, 100 என்ற அதிவேக எம்.பி.பி.எஸ்., பிளான்கள் அறிமுகம் செய்துள்ளனர். இதற்கான ஒரு மாத கட்டணம் ரூ.3999, 5999, 9999, 16,999 என்ற விகித்திலும், கூடுதலாக மோடத்திற்கு கட்டணம் ரூ.150 வீதம் செலுத்த வேண்டும். ""இச் சேவை பெற விரும்புவோர், சிவகாசி சேவை மையத்தினை, 04562 221 600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்,'' என, தொழில் நுட்ப அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி :-தினமலர் 

கிங்பிஷர் மீதான நடவடிக்கையில் சட்ட சிக்கல்

       கல்வி கடன் வாங்கிய மாணவர்களை மிரட்டும் வங்கிகள் கோடி கோடியாய் கடன் வாங்கிய கிங் பிஷர் நிறுவனம்  மீது நடவடிக்கை எடுக்க சட்ட சிக்கல் இருக்காம் இவர் சொல்லுவதை படியுங்கள் :-Click Here

Saturday, April 26, 2014

டாடாவுடனான கூட்டணி: வெளியேற டோகோமோ முடிவு

                 டாடா நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பங்குகளை விற்றுவிட்டு வெளியேற ஜப்பானின் டோகோமோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.2009-ம் ஆண்டு டாடா குழுமத்துடன் இணைந்து ஜிஎஸ்எம் சேவையை டோகோமோ வழங்கி வருகிறது. ஜப்பானின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான டோகோமோ என்டிடி நிறுவனம் கூட்டு நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் 261 கோடி டாலர் முதலீடு செய்திருந்தது. டோகோமோ நிறுவனத்துக்கு இந்த கூட்டணி லாபகரமானதாக அமையவில்லை. இதனால் வெளியேற முடிவு செய்துள்ளது.டோகோமோ விற்பனை செய்யும் 26 சதவீத பங்குகளை டாடா நிறுவனமே வாங்கிக் கொள்ளும் என்று தெரிகிறது.
              <நன்றி :- தி ஹிந்து >

30ஆவது தேசிய கவுன்சில்

துணை டவர் நிறுவனமும் இதர மத்திய சங்க செய்திகளும்

கோவை கருத்தரங்கம்

ஏப்ரல் 26 - பெ.சுந்தரம் பிள்ளை நினைவுநாள்



              1855ல் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்து, தத்துவப் பேராசியராயாய் பணியாற்றியவர். தன்னுடைய 36 ஆம் வயதில் (1891ல்) மனோன்மணீயம் என்ற நாடகநூலை எழுதி வெளியிட்டார். இந்நாடகநூல் எழுதப்பெற்று 80 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நூலில் உள்ள ‘நீராருங் கடலுடுத்த...’ என்ற பாடல் சிற்சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இன்று மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையின் நினைவு நாள்.

திருத்தப்பட்ட பாடல் வடிவம்

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

ஏப்ரல் 25 - புதுமைப்பித்தன் பிறந்தநாள்

படம் : அருணோதயம்
            நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப் பித்தன் பிறந்தநாள். 108 ஆண்டுகளுக்கு முன் பிறந்த புதுமைப்பித்தன் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதைகள் ‘பொன்னகரம்’ மற்றும் ‘துன்பக்கேணி’. பொன்னகரம் (1934) அன்றைய சென்னையின் சேரிப்பகுதியைச் சேர்ந்த அம்மாளு என்ற பெண் தன் கணவனின் மருத்துவச் செலவிற்காக கற்பை மீறுவது தொடர்பான கதை. மருத்துவம் அன்றைக்கும் வணிகமாகத்தான் இருந்தது என்பதையும், கற்பு என்பது ஒருவகையில் மேலாதிக்கக் கற்பிதம்தான் என்பதை நிலைநிறுத்துத முயன்ற கதை. துன்பக்கேணி சென்ற நூற்றாண்டில் இலங்கை முதலான நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்ட தலித்துகளின் வாழ்வைப் பிரதிபலித்தது. இவ்விரு கதைகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பாடங்களாக இருந்து வந்தன. ஜெய்சாம்யாக் என்பவர் தொடுத்த ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கினைக் காரணம்காட்டி இச்சிறுகதை நீக்கப்பட்டது. துணையாக பொன்னகரமும் கல்விச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இடம் மறுக்கப்பட்ட புதுமைப்பித்தனை, அவரது பிறந்தநாளில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளில் பிரதிபலித்த நவீன இலக்கியத்தின் முன்னோடியாக நினைவு கூர்வோம்.

Wednesday, April 23, 2014

4ஜி சேவையில் ரிலையன்ஸ்

 4ஜி சேவையினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளது.இதற்காக அமெரிக்க டவர் கார்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ஏடிசி நிறுவனத்திற்கு சொந்தமான 11 ஆயிரம் டவர்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.4ஜி சேவையை ஜீலை - செப்டம்பர் காலாண்டிற்குள் தொடங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை

செய்தி படிக்க :-Click Here

கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம்

   கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் நாளை (24-04-2014)  நடைபெற உள்ளது .நிர்வாகத்தின் அலட்சிய  போக்கால் இந்த  கமிட்டியின் கூட்டம் நீண்ட நாட்களாக நடைபெறவில்லை .தற்போது இந்த  கமிட்டி மறு சீரமைக்கப்பட்டு இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி  நடைபெறும் முதல் கூட்டம் இது தான் .மேலும் காலதாமதம் இன்றி ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம் . 

30 வது தேசிய கவுன்சில் கூட்டம்

             30 வது தேசிய கவுன்சில் கூட்டம் இன்று (23-04-2014) அன்று நடைபெற்றது  ஸ்ரீ A .N .ராய் , தேசிய  கவுன்சில் ,சேர்மன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது .நீண்ட நிலுவையில் உள்ள உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதில் , நிர்வாகத்தின்  அலட்சிய போக்கை ஊழியர் தரப்பு கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தது ஊழியர்களுக்கு சம்பளம் பெருமளவில் கொடுப்பதால் தான்  பெரும்  இழப்பு நமது நிறுவனத்திற்கு ஏற்பட்டது போல் நமது CMD அவர்கள் அடிக்கடி அறிக்கை விடுவதை ஊழியர் தரப்பு ஆட்சேபனை செய்துள்ளது .நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் போது உயர்மட்ட அதிகாரிகள் ஆடம்பர  செலவுகளை பெருமளவில் செய்வதை ஊழியர் தரப்பு சுட்டி காட்டி  உள்ளது .அதே போல் டவர்களை  பராமரிக்க ஒரு தனி துணை நிறுவனத்தை உருவாக்குவதையும் ,அதில் மூலதன ,தொழில் நுட்ப பார்ட்னெர் ஆக தனியார் நிறுவனத்தை அனுமதிப்பதையும் ஊழியர் தரப்பு மிக கடுமையாக எதிர்த்து உள்ளது . பி எஸ் என் எல் வாரியத்தின் இந்த முடிவை ரத்து செய்ய ஊழியர் தரப்பு வலியுறுத்தி உள்ளது .விவாதங்களின்  ஒரு சுருக்கமான அறிக்கை நாளை நமது அனைத்திந்திய  வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

          ‘புத்தகத்தை வாசித்ததால் நான் கெட்டுப்போனேன்’ என்று சொல்பவர்களை நாம் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ‘அன்றே ஒழுங்காக வாசித்திருந்தால் இன்று நன்றாக இருந்திருப்பேன்’ ‘புத்தகம் படித்துக் கற்றுக் கொண்டேன்’ என்பவை நாம் அடிக்கடி கேட்கும் வாக்கியங்கள்.  இன்றைய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது புத்தகங்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. நம் தோழர்களில் எத்தனை பேர் வாசிப்பை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்? ‘நேரமே கிடைக்கவில்லை தோழர்’ என்ற நொண்டிச்சாக்கை கூடைநிறைய நிரப்பித் தலையில் சுமந்து கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு ‘வாசிப்பதில்லையா?’ என்று கேட்பவர்கள் மேல் எறிந்து கொண்டிருக்கப் போகிறோம்.

          இந்த ஆண்டு உலக புத்தக தினத்தில் ‘வாசிப்பை வாழ்க்கையின் நெறிகளில் ஒன்றாக்குவோம்’ என உறுதியேற்போம்.

‘கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்
கற்றதைப் பயன்படுத்தின் கொண்டே மேலும் கற்க வேண்டும்’
- தோழர் சப்தர் ஹாஷ்மி

ஏப்ரல் 23 - தோழர் லீலாவதி நினைவு நாள்
















          நீதியை நிலைநாட்ட நிமிர்ந்து நின்ற தோழர் லீலாவதி மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள் இன்று. குடிநீர் விற்பனையையும் அரசியல் ரவுடித்தனத்தையும் எதிர்த்து தன்னுடைய இன்னுயிரையும் ஈந்த வீராங்கனை லீலாவதியை நினைவில் நிறுத்துவோம்ஜனநாயகத்தை நிலைநிறுத்த, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க மக்களைத் திரட்ட உறுதியேற்போம்!
நன்றி :தீக்கதிர்

Tuesday, April 22, 2014

இன்றும் தேவைப்படுகிறார் - லெனின்

BSNL to open mobile network expansion tender in May

செய்தி படிக்க :-Click Here

டவர் துணை நிறுவனம்

          நமது நிறுவனத்தில் உள்ள டவர்களை நிர்வகிக்க ஒரு துணை நிறுவனம் உருவாக்குவது என்பதற்கான குறிப்பை நிர்வாகம் இன்று (21-04-14) சங்கங்களிடம் வழங்கியது.துணை நிறுவனம் உருவாக்குவதற்கான காரணத்தை நிர்வாகம் பின்வருமாறு கூறியுள்ளது.


(i)பிஎஸ்என்எல்நிறுவனத்தில் 60,000க்கும் மேற்பட்ட டவர்கள் உள்ளன. ஆனால் அந்த டவர்களில் இருந்து போதிய வருவாய் கிடைக்கவில்லை.


(ii) டவர்களில் இருந்து மேலும் வருவாய் ஈட்டுவதற்காக , துணை நிறுவனம் அமைக்கநிர்வாகம் முடிவு செய்துள்ளது.

(iii)துணை நிறுவனம் உருவாக்குவதற்கான நோக்கத்திற்காக ஆலோசக நிறுவனமாக KPMG என்ற அமைப்பு பிஎஸ்என்எல் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டு அது தன் அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.

(iv)பிஎஸ்என்எல் வாரியம் துணை நிறுவனம் அமைக்க ஏற்கனவே அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டது. தற்போது அது அமைச்சர்கள் குழு முன் உள்ளது.

( V ) துணை நிறுவனம் உருவாக்கபட்டபின்  ஒரு மூலதன மற்றும்  தொழில்நுட்ப   பார்ட்டனராக ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ப்பது.

          நிர்வாகத்தின் குறிப்பை படித்தபின் அனைத்து தொழிற் சங்கங்களும் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சை போக்கில் பிஎஸ்என்எல்வாரியம் துணை நிறுவனம் அமைக்க ஒப்புதல் கொடுத்ததை வன்மையாக ஆட்சேபனை செய்துள்ளன. மேலும் ஒரு மூலதன மற்றும்  தொழில்நுட்ப பார்ட்டனராக ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ப்பது  என்பது பின்னாளில் பங்குகளை விற்று தனியார் மயமாக்கும் முயற்சியே என்று கடுமையாக எதிர்த்து உள்ளன.

          இன்றைய கூட்டத்தில்  நமது BSNLEU  சங்கம் சார்பாக தோழர் P  அபிமன்யூ, GS, தோழர்  V.A.N.நம்பூதிரி, தலைவர், தோழர் அனிமேஷ்  மித்ரா, Dy.GS. மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, ஏ.ஜி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மற்ற சங்கங்களின் மற்றும்  அசோசியேசன்ஸ்  தலைவர்களும் ஒரு நல்ல எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

Monday, April 21, 2014

இது தான் அமெரிக்க ஜனநாயகம்


2வயது தம்பியை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுமி: அமெரிக்காவில் அதிர்ச்சி:- செய்தி படிக்க Click Here

BSNL’s Free Incoming Roaming Plan Getting Tremendous Response Across India, Can this be a Game Changer?

செய்தி படிக்க :-Click Here

கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு


அன்பார்ந்த தோழர்களே !
                               
             நாம் நடத்திய பல்வேறு  செயற்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில்   மே மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் கேரள மாநிலத்துக்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக ஒரு குடும்ப சுற்றுலா  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கொச்சின் ,அதிரம்பள்ளி  நீர்வீழ்ச்சி ,குருவாயூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல தனி நபர் கட்டணமாக ரூபாய் 1000/- என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .தங்கும்  கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 50/- தனியாக கட்டவேண்டும் .குழந்தைகளுக்கு என்று அரை கட்டணம் கிடையாது .14-05-2014 அன்று இரவு ஒரு சிறப்பு  பேச்சாளரின் உரை வீச்சு நடைபெறும் .மாவட்ட சங்கம் சார்பாக போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும் ஏற்பாடு உண்டு .அனைத்து  கிளை செயலர்களும் வரும் மே 1 தேதிக்குள் ஒவ்வொரு கிளையிலும் எத்துனை பேர் கலந்து கொள்கிறனர்   என்ற விபரத்தை மாவட்ட சங்கத்திடம்  கூறி விட வேண்டும் . வரும் நபர்களுக்கான தொகையை  மே 5 தேதிக்குள் செலுத்திவிடவேண்டும் .

Sunday, April 20, 2014

திறந்த வெளி கருத்தரங்கம்

   தமிழ் மாநில சங்கம் சார்பாக ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுத்த முடிவின்படி திறந்த வெளி கருத்தரங்கம் மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் கோவை மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் வரவேற்று உரை ஆற்றினார். மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்ச கோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்கள் தன் உரையில் பொதுத்துறை உருவான வரலாற்றையும்,பொதுத்துறை நிறுவனங்கள் தன்  லாபத்தில் அரசுக்கு அளித்த மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார். உலகமயமாக்கல் ,தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்  அதற்கு முந்திய  பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி  அரசும்  பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும் அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991 முதல் இதுவரை நடத்திய 16 வேலை  நிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம் பங்கேற்றதின் விளைவாகத்தான் இன்று வரை 1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம்  காக்கக்பட்டு உள்ளதை நினைவூட்டினார். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக  ரூபாய் 10,000/- வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார். மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்  தோழர் P சம்பத் தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான மதவாத சக்திகளின் போக்கை வரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார். தேச தந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமான மதவாத சக்திகள் மீண்டு எழுவது தேச நலனுக்கு  மிக ஆபத்து என்பதையும்,  இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக போராடக்  கூடிய ஒரே அமைப்பு இடதுசாரிகள் மட்டுமே என்பதை அவர் ஆணித்தரமாக கூறினார்பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் மட்டுமே  சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெற வில்லை என்பதை அவர் கூறினார். அதன்பின் தாராள மயமாக்கல் கொள்கையும், தொலை தொடர்பு கொள்கையும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் தாராளமய கொள்கையால், பொதுதுறை நிறுவனங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும், இக்கொள்கையால் அரசு துறையில்  ஊழல் புரையேடி போகும் அவலத்தையும் சுட்டி காட்டினார். கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல் 30,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு பணம்  இந்திய பங்கு சந்தையில் முதலீடாக கூடியதன் நோக்கம் பற்றியும் ,குஜராத் மாநிலத்தில் பெண்கள் பெருமளவில் ரத்த சோகை நோயால்  அவதிப்படுவதையும், அந்த மாநில அரசு தினமும் 10 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வறுமை கோட்டிற்கு மேல் வாழ்வதாக கூறுவதின்  அவலத்தையும் சுட்டி காட்டினார். கார்போரேட்  நிறுவனங்களும், அவைகளின் பெரும்பாலான ஊடகங்களும்  மோடியை தூக்கி நிறுத்துவதன் நோக்கத்தை அவர்   எடுத்துரைத்தார். ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி அனைத்து மாநிலங்களிலும் இக்  கருத்தரங்கம் வெற்றிகரமாய்   நடை பெறுவதை சுட்டி காட்டினார். நிலுவையில் உள்ள  கோரிக்கைகளுக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட உள்ள சூழலையும் அவர் கூறினார். தோழர் வெங்கட்ராமன் நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது.


















Friday, April 18, 2014

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி.க்கு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்தி படிக்க ;-cLICK hERE

RGB தேர்தல்

RGB தேர்தல்- BSNLEU வெற்றி தொடருகிறது
கோயம்புத்தூர் SSA வில் 17-04-2014 அன்று நடைபெற்ற சென்னை கூட்டுறவு சங்க RGB தேர்தலில் மொத்தம் உள்ள 15 இடங்களையும் நமது BSNLEU சங்க கூட்டணி கைப்பற்றி சாதனை வெற்றி  படைத்துள்ளது . அதே போல் ஈரோடு SSA வில் மொத்தம் உள்ள 8 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 6 இடங்களையும் NFTE சங்கம் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது .

மத்திய சங்க செய்திகள்

 மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கை 124 படிக்க :-Click Here

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை

BSNL நஷ்டம் - யார் குற்றவாளி?

Thursday, April 17, 2014

BSNL, ISRO spar over satellite bandwidth

செய்தி படிக்க :-Click Here

PSE land monetisation:

செய்தி படிக்க :-Click Here

மத்திய சங்க செய்திகள்

   தோழர் P அபிமன்யூ, GS மற்றும் தோழர் . சைபல் சென்குப்தா, ஏ.ஜி. எஸ், ஆகியோர் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை திரு ஆர்.கே. கோயல், பொது மேலாளர் (Estt.) அவர்களை சந்தித்து விவாதித்தனர் . குறிப்பாக NEPP மற்றும் E1 சம்பள விகிதம் அமல்படுத்துவதில் உள்ள தடைகளை அகற்றுதல். டெலிகாம் மெக்கானிக் LDCE, தேர்வில் 10 ம் வகுப்பு தேர்வு பெறாதவர்களுக்கு அனுமதி அளிப்பதில் ஒரு முறை தளர்வை கொடுப்பது ,NEPP கீழ் பதவி உயர்வு பெற்று ஊதிய தேக்கம் அடைந்தவர்களுக்கு 3% கூடுதல் சம்பள உயர்வு வழங்குவது, கிரேடு IV வழங்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வை திரும்ப பெற்ற கார்போரட் நிறுவன அலுவலக உத்தரவை ரத்துசெய்வது, ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு உதவித்தொகை ஆகியவை விவாதிக்கப்பட்டது. 

கொல்கத்தா அனைத்திந்திய மாநாடு

நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க அனைத்திந்திய மாநாடு வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கொல்கத்தா நகரில் நடைபெற உள்ளது .மேற்கு வங்கத்தில் உள்ள 4 மாநில சங்கங்களும் இணைந்து மாநாட்டை நடத்த உள்ளன . 

Tuesday, April 15, 2014

அலை இருக்கும் போது சேலை எதற்கு?

கர்நாடகத்தில் மோடி படத்துடன் 5 ஆயிரம் சேலைகள் பறிமுதல்.செய்தி படிக்க :-Click Here

BSNL Launches New Prepaid Plan for Vishu named Deepam Offering Reduced Rates on Friends and Family Numbers

செய்தி படிக்க :-Click Here

விருப்ப ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்

தொழில்துறையில் நிலவும் ஸ்திர மற்ற நிலை காரணமாக தாமாக ஓய்வு பெறுவோர் (விஆர்எஸ்) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் செய்தி படிக்க :-Click Here

மத்திய சங்க செய்திகள்

தேசிய கவுன்சில் கூட்டம் 22-04-2014 க்கு பதிலாக 23-04-2014 அன்று நடைபெற உள்ளது .
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி 23-04-2014 க்கு பதிலாக 24-04-2014 அன்று நடைபெற உள்ளது .

Monday, April 14, 2014

BSNL to start technical varsity, offer engineering and management courses

  பிஎஸ்என்எல் நிறுவனம் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் அடங்கிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை இன்னும் 8 மாத காலத்திற்குள் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
          State-run telecom major BSNL has started work on establishing a technical university that will offer engineering and management courses. The PSU expects to approach All India Council for Technical Education (AICTE) as well as University Grants Commission (UGC) for formal approval within next eight months. "BSNL has sufficient infrastructure to meet AICTE guidelines for engineering and management education. We also have sufficient supporting staff to meet norms as laid down by UGC. Our staff is working on it. We should be able to send it for formal approval in 6-8 months," BSNL director (Consumer Mobility) Anupam Shrivastava said. He said it should not be difficult for BSNL to get the necessary approvals as some steps were taken by the Human Resource Development Ministry in 2008 to boost educational system."Due to the initiatives of HRD ministry, institutions running short-term courses such as Defence Institute of Advance Technology have been converted into formal and autonomous education institutions. We should also have no issues in getting approval," Shrivastava said.The Public Enterprise Selection Board has selected Shrivastava for the post of chairman and managing director of the company, succeeding the present CMD R K Upadhyay.BSNL has formed a committee under its senior general manager G C Manna to work on the detailed project report.Shrivastava said at present he cannot share the exact number of seats that BSNL's technical institute will have but said the company's campus will have a capacity to train 1,500 to 3,000 students at one time. "We have a centre in Ghaziabad which is aided by United Nations but is under-utilised. It has a capacity to train between 2,500-3,000 students. Similarly, we have a centre in Jabalpur. There are other 16 centres which have a minimum capacity of 1,000 students," Shrivastava said. He added that BSNL will add formal courses on cyber security at the centre to contribute in government's target of creating 5 lakh professionals skilled in this domain by 2018."Cyber security is an emerging concern. We have the infrastructure to train people. Today, we have a crunch of cyber security experts. This initiative will not only help us but also other organisations with skilled workforce. It will be a dynamic course and its format will decided after due deliberations," Shrivastava said.BSNL's plan to set-up a technical training institute is part of its asset utilisation plan and help it in reducing losses.
    <நன்றி :- டைம்ஸ் ஆப் இந்தியா >

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்



அவர் ஏற்றி வைத்த தீபத்தை தொடர்ந்து எரியச் செய்வோம்

.                







        "தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். “டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபத்தை ஏழை, எளிய மக்களுக்குச் சமூகநீதி என்ற இலக்கை நாம் அடையும்வரை தொடர்ந்து எரியச் செய்யவேண்டும்...”

Sunday, April 13, 2014

பீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு

முசாபர்பூர் நகரில் நடைபெற்ற பீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு செய்தி  படிக்க :- Click Here

Thursday, April 10, 2014

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

    இன்று(10-04-2014) ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் மற்றும்  தோழர் செல்வராஜ் அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழா கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,TTA அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பொதுக்குழுவை தொடக்கி வைத்து பேசும் போது நடந்து முடிந்த மாவட்ட மகாநாடு , தவறான மாற்றல் உத்தரவை இட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மற்றும் சென்னை சொசைட்டி RGB தேர்தல் ஆகியவற்றின் வெற்றிக்கு நமது உருக்கு போன்ற ஒற்றுமை மட்டுமே காரணம் என்பதை விரிவாக   கூறினார் .வர உள்ள மக்களவை தேர்தலில் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்தை விளக்கினார் .RGB தேர்தலில் திருமங்கலம் பார்முலா போல் NFTE சங்கத்தினர் வீடு வீடாக ரிஸ்ட் வாட்ச் கொடுத்த கேவலத்தையும் மீறி நாம் வெற்றி பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது என கூறி மாவட்ட செயலர் அனைவருக்கும் அதற்காக் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் .தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு செயற்குழுவில் சொல்லிய உடன் ரூபாய் 7500/- வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது மாவட்டத்தில் வளர்ச்சி பணிக்கு மாவட்ட நிர்வாகம் எந்த விதத்திலும் உதவாத போக்கை கடைபிடிப்பதை உதாரணங்களுடன் எடுத்து உரைத்தார்.தோழர் செல்வராஜ்,TTA அவர்களின்  பணி ஓய்வை பாராட்டி தோழர்கள் முத்துசாமி ,வெங்கடேஷ்,சிவஞா னம்  ,வெள்ளை பிள்ளையார் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர் தோழர்  வேல்சாமி ஆகியோர் பேசினர் .ஏற்புரையில் பேசிய தோழர் செல்வராஜ் சங்கத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டிய அவசியத்தை மிக அழகாக ஒரு குட்டி கதை கூறி விளக்கினார் .தோழர் செல்வராஜ் அவர்களுக்கு தோழர் ரவீந்திரன் மாவட்ட சங்கம் சார்பாக பொன்னாடை போர்த்தி கவ்ரவித்தார் .நினைவு பரிசை மாவட்ட தலைவர்  தோழர் சமுத்திரகனி அவர்கள் வழங்கினார் .ஓய்வூதியர்  சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி தோழர் செல்வராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவ்ரவித்து மக்களவை தேர்தல் பணி குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார் .கிளை பொருளாளர் தோழர் I .முருகன் நன்றி கூற பொது குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது .

தொடரும் வெற்றி

        ப்ராஜெக்ட் பிரிவில் இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .

Wednesday, April 9, 2014

கூட்டு போராட்ட குழு

            இன்று கூட்டு போராட்ட குழுவின் பிரதிநிதிகள் நமது CMD அவர்களை சந்தித்து நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி ஒரு குறிப்பாணையை  சமர்ப்பித்தனர். இன்றைய கூட்டத்தில் தோழர்கள்  P .அபிமன்யு , GS, BSNLEU & கன்வீனர், JAC, தோழர் V.A.N. நம்பூதிரி, President, BSNLEU, தோழர் சந்தேச்வர் சிங், GS, NFTE & தலைவர், JAC, தோழர் ஜெயப்ரகாஷ், GS, FNTO & இணை  கன்வீனர், JAC, தோழர் R.C. பாண்டே , GS, BTEU & பொருளாளர், JAC, தோழர் பவன் மீனா, GS, SNATTA & இணை கன்வீனர், JAC, தோழர்  சுரேஷ் குமார், GS, BSNL MS, தோழர் அப்துஸ் சமத், Dy.GS, TEPU, தோழர் R.K. கோஹ்லி, GS, NFTBE & com. R.S. யாதவ், இணை செயலர், BSNL ATM ஆகியோர் கலந்து கொண்டனர். 
<குறிப்பாணை படிக்க >Click Here

Monday, April 7, 2014

K.G.Bose Memorial and Education Trust conducts trade union class at New Delhi.

புகைப்பட தொகுப்பு பார்க்க :-Click Here 

விருதுநகர்: ஆயா கொடுத்த ஆயிரம்!

               
                   வேறு வண்ணப் பதாகைகள் எதுவும் இல்லை. செங்கொடிகளோடும் ஜிந்தாபாத் கோஷங்களோடும் விருதுநகர் தொகுதி முழுக்க வலம் வருகிறார்கள் காம்ரேடுகள்.“ரொம்ப நாளைக்கு பிறகு, நாம நமக்காக கொடி பிடிக்கிறோம், கோஷம் போடுகிறோம்!” சந்தோஷத்தை பரிமாறிக் கொள்கிறார்கள் தோழர்கள். விருதுநகர் தொகுதியில் சத்திரப்பட்டி கிராமத்திற்குள் ஓட்டுக் கேட்டு நுழைந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாமுவேல்ராஜை வழிமறித்த ஒரு மூதாட்டி, “மூணு நாலு மாசமா முதியோர் உதவித் தொகை வரலை. அதுக்கு முன்னாடி சிறுகச் சிறுக சேர்த்தது. செலவுக்கு ஆகும். வச்சுக்கங்க!” வேட்பாளரின் கையில் திணித்து விட்டுப் போனார். கண்கலங்கி விட்டார்கள் காம்ரேடுகள். அம்மையார்பட்டி, ஆலங்குளம், செவல்பட்டி கிராமங்களில் சாமுவேல்ராஜின் கழுத்தில் 10 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலைகள் விழுந்தன. “யாருகிட்ட வாங்கணும், யார்கிட்ட கொடுக்கணும்னு மக்களுக்கு நல்லாத் தெரியும்ல!” தோழர்கள் பொங்குகிறார்கள்.-
           < நன்றி: நக்கீரன் (2014, ஏப்.05-08)>

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...