Thursday, December 31, 2015

இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை...100,00,00,000!


mobiles
இந்தியாவில் 100 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 120 + கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவின் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டு விட்டதாக டிராய் தெரிவித்துள்ளது. அதி வேகமாக இந்தியாவில் செல்போன் துறை வளர்ந்து வருவதாகவும், சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் செல்போன் சந்தாதாரர்கள் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது.கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 70 லட்சம் செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன என்று கணக்கு கூறுகிறது. இந்த திடீர் உயர்வுதான் மொத்த எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த உதவியுள்ளது.
             நன்றி :ஒன் இந்தியா செய்திகள் 

HAPPY NEW YEAR 2016

விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

'Service with a Smile'

BSNL Employees pledge 'Service with a Smile' to its customers. CMD BSNL Shri . Anupam Shrivastava administered this oath.

7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல்

7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான பணிகள்  தொடங்கி விட்டன .வரும் 11/01/2016 அன்று அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டத்தை நிர்வாகம் கூட்டி உள்ளது .6 வது சரிபார்ப்பு தேர்தலில் பங்கேற்ற தொழிற்சங்கங்களுக்கு அக் கூட்டதிற்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது .தேர்தலை சந்திக்க அனைத்து மாநில, மாவட்ட கிளை சங்கங்கள் ஆயுத்த பணிகளை தொடங்க மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .  

IDA உயர்வு

01/01/2016 முதல் IDA 4.5% உயர்ந்து உள்ளது .ஆக மொத்தம் IDA 112.4% ஆக இருக்கும்

தமிழக FORUM கூட்ட முடிவுகள்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தோழர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

இன்று அருப்புக்கோட்டை கிளைச் சங்கம் சார்பாக தோழர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .கிளைத் தலைவர் உதயகுமார் மற்றும் கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் AIBSNLEA மாவட்ட செயலர் திரு ராதாகிருஷ்ணன் , AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாச்சாமி , .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளமாறன் , கிளை செயலர் சோலை , மாவட்ட உதவி செயலர் அஷ்ரப்தீன் , ஒப்பந்த ஊழியர் சங்க செயலர் செந்தில் , மாவட்ட துணை தலைவர் முனியசாமி , JTo சம்பத் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ,மாவட்ட செயலர் ரவீந்திரன் தோழர் கிருஷ்ணசாமிக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார் .ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.

Wednesday, December 23, 2015

வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கத்தின் மிலாடி நபி மற்றும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 
மிலாடி நபி தமிழ் வாழ்த்து அட்டை

மார்க்கெட்டிங் பணியில் BSNLEU

22/12/2015 அன்று  ராஜபாளையம் PACR பாலிடெக்னிக்கில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு நமது நிறுவனம் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. பங்கேற்றவர்களுக்கு நமது புது வசந்தம் சிம்கள் வழங்கப்பட்டன. SDE மார்க்கெட்டிங் உடன் மாவட்ட செயலர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந் நிகழ்வில் 120 சிம்கள் வழங்கப்பட்டன .

ஆர்ப்பாட்டம்

78. 2% IDA இணைப்பு பலன்களை பென்சன்தாரர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் செய்யும் மத்திய அரசின் போக்கை கண்டித்து விருதுநகரில் போரம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் .


Friday, December 18, 2015

78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியதாரர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் BSNLஐ பலப்படுத்த "SERVICE WITH SMILE" என்கின்ற 100 நாட்கள் திட்டம்- அகில இந்திய FORUM முடிவு.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தூய்மை பணியில் நமது BSNLEU



















வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்-

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Wednesday, December 16, 2015

ரோடு ஷோ

15ம் தேதி விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் சார்பாக சத்திரப்பட்டி அருகே ரெட்டியாபட்டி கிராமத்தில் ரோடு ஷோ நடைபெற்றது .மாவட்ட செயல்ருடன் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ,தோழர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழர் I . முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .113 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது .

நன்கொடை

தளவாய்புரம்  தொலை பேசி நிலையத்தில் பணி புரிந்து 31/08/2015 அன்று ஓய்வு பெற்ற நமது தோழர் அய்யனார் SSS அவர்கள் தனது பணி  ஓய்வை முன்னிட்டு கிளை ,மாவட்ட மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா ரூபாய் 500/- வழங்கி உள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .






ராஜபாளையம் கிளை உறுப்பினர் தோழர் N சந்திரசேகரன் ,டெலிகாம் மெக்கானிக் அவர்கள் கடந்த 31/10/2015 அன்று பணி ஓய்வு பெற்றார் .தனது பணி  ஓய்வை முன்னிட்டு கிளை ,மாவட்ட , மாநில, மற்றும் மத்திய  சங்கங்களுக்கு தலா ரூபாய் 500/- வழங்கி உள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .

Monday, December 14, 2015

விருதுநகர் மாவட்ட AIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம்

விருதுநகர் மாவட்ட AIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் இன்று தோழர் முருகேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் அய்யாச்சாமி சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .அச் சங்கத்தின் மாநில சங்க நிர்வாகியும் K .G .போஸ் அணியின் ஸ்தாபக தலைவருமான அருமை தோழர் மோகன்தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் .BSNLEU மாவட்ட செயலர் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி அவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் .அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள் இக் கூட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.திரளான பென்சன்தாரர்கள் கலந்து கொண்டனர் .

125 ஆவது DR .அம்பேத்கார் பிறந்த நாள் விழா

125 ஆவது DR .அம்பேத்கார் பிறந்த நாள் விழாவை விருதுநகர் மாவட்டத்தில்  நினைவு தினம் அன்று  நுழை வாயில் கூட்டமாக விருதுநகர்,ராஜபாளையம்  மற்றும் சிவகாசியில் கொண்டாடப்பட்டது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...