Monday, March 21, 2016

விருது நகர் மாவட்ட செயற்குழு

தொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய விருதுநகர் விரிவடைந்த மாவட்ட செயற்குழு
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Saturday, March 19, 2016

எழுச்சிகரமாக நடைபெற்ற திருப்புமுனை செயற்குழு

இன்று ராஜபாளையம்  நகரில் விருதுநகர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது .மாவட்டம் முழுவதும் 200 பேர் பங்கேற்ற உற்சாகமான  சூழலில் நடைபெற்ற இச் செயற்குழு மாவட்டத்தில் நமது BSNLEU சங்கம் ஒரு மாபெரும் சக்தி என்பதை நிரூபித்தது . நமது சங்க கொடியை மூத்த  தோழரும் ,மாவட்ட சங்க நிர்வாகியுமான தோழர் சிவஞானம்  ஏற்றி வைக்க ,தேசிய கொடியை நமது AITEU CL III(N) சங்கத்தின் முன்னால் மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார் .தோழர்கள் முத்துசாமி  மற்றும் இளமாறன் அவர்களின் கோஷங்களுடன் முறையாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் தொடங்கியது .தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .மாவட்ட தலைவர் தலைமை உரையுடன் துவங்கிய செயற்குழு , மாவட்ட செயலரின் துவக்க உரை மற்றும் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில உதவி செயலர் தோழர் முருகையா சிறப்புரையுடன் நிறைவு பெற்றது .பின் துவங்கிய செமினாரை மாவட்ட செயலர் துவக்கி வைக்க , கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம்  தனது கருத்துக்களை பதிவு செய்தார் .அதற்குரிய விளக்கங்களை மதிப்பிற்குரிய  துணை மாவட்ட பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார் .அதன் மாவட்ட பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் ,ITS  அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .அதன் பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் தோழர்கள் சிவஞானம் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்கள் கெள்ரவிக்கபட்டனர் .வர உள்ள சரிபார்ப்பு தேர்தலில் 60 %முதல் 70 % வரை நமது BSNLEU சங்கத்திற்கு  ஆதரவை திரட்டுவது என்பது 2017 இல் வர உள்ள ஊதிய உடன்பாடு மற்றும் IDA இணைப்பு மற்றும் நிறுவன பாதுகாப்பு   ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் என்பதை பேசிய அனைவரும் சுட்டி காட்டினர் .BSNLEU சங்கம் தன் சொந்த பலத்தில் 50% வாக்கிற்கும் மேல் வாங்கும் என்பதை பேசிய அனைவரும் அறுதியிட்டு கூறினர் .சென்ற சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் ,மெடிக்கல் அலவன்ஸ்  ,LDC இன்னும் சொல்ல போனால் 10,000 கோடி நஷ்டம் அடைந்தற்கும் BSNLEU 
காரணம் என்று சொனவர்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வந்த பிறகு வாய் மூடி மௌனம் சாதித்தது மட்டும் இன்றி அதற்கு எந்த வித இயக்கமும் நடத்தாமல் ஊழியர்களை ஏமாற்றிய செயலை அனைவரும் தனது பேச்சில் சுட்டி காண்பித்தனர் .இச் செயற்குழு மாவட்டத்தில் ஒரு திருப்புமுனை செயற்குழுவாக திகழ்ந்தது .ராஜபாளையம் கிளை தோழர்கள் முத்துராமலிங்கம் ,ராதாகிருஷ்ணன் ,I .முருகன் ,ரவிச்சந்திரன் ,சிவஞானம், அனவரதம் ,ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகி வேலுசாமி தலைமையில் பம்பரமாய் பணியாற்றிய ராஜபாளையம் கிளை  தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு    நன்றி நன்றி நன்றி .













Friday, March 18, 2016

ரூ56,621 கோடி வங்கி கடன்களை ஏப்பம் விட்ட 5,275 'விஜய் மல்லையாக்கள்'... 'ஷாக்' ரிப்போர்ட்

வங்கிக் கடன்களை வாங்கி ஏமாற்றியவர்கள் குறித்து இந்தியா ஸ்பெண்ட் இணைய தளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியோர் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் 9 மடங்காக அதிகரித்திருக்கிறது. அதாவது இந்த தொகையானது மத்திய அரசு வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ35,894 கோடியைவிட 1.5 மடங்கு அதிகமாகும். மொத்தம் ரூ 56,521 கோடி வங்கிகளின் வாரா கடனாக உள்ளது.வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாததில் மும்பையை சேர்ந்த வின்சம் டைமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி நிறுவனம், போர்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ் நிறுவனங்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த 2 நிறுவனங்களும் இணைந்து மொத்தம் ரூ3,263 கோடி கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்ததாக மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஜூம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் ரூ 1,647 கோடி; விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ1,200 கோடி, மும்பையின் பீடா நாப்தால் நிறுவனம் ரூ951 கோடி,த்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராஜா டெக்ஸ்டைல்ஸ் ரூ694 கோடி வங்கிக் கடன்கள் பாக்கி வைத்துள்ளன.
ரூ56,621 கோடி வங்கி கடன்களை ஏப்பம் விட்ட 5,275 'விஜய் மல்லையாக்கள்'... 'ஷாக்' ரிப்போர்ட்
நன்றி :- ஒன் இந்தியா செய்திகள் 

Tuesday, March 15, 2016

OFF NET கால் வசதி

          Non-executive ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள சர்வீ ஸ் சிம் இல் 50 ரூபாய் அளவுக்கு OFF NET  கால் வசதி செய்து கார்போரேட் அலுவலகம் உத்தரவு இட்டுள்ளது. 6 மாத  காலம் பரீட்சார்த்த அடிப்படையில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. நமது BSNLEU மத்திய  சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியின் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.  உத்தரவு எண் பார்க்க: Click Here

Friday, March 11, 2016

Tuesday, March 8, 2016

JTO LICE தேர்வு

JTO LICE 2013-14 தேர்வில் 2008ம் வருடத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் தேர்வு எழுத அனுமதிப்பது தொடர்பாக மத்திய சங்கத்திற்கு கடிதம் படிக்க :-Click Here

இ‌ன்று உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!

           மா‌ர்‌ச் 8 உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!
Happy women's day animations
மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது. எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌த் த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது. இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார். அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம்.(நன்றி :-வெப் துனியா )
அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம் நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...