Thursday, February 23, 2017

டெல்லி பேரணி –

22.2.2017 அன்று டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக, BSNL ஊழியர் சங்கமும், BSNL கேஷுவல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய பிரம்மாண்ட பேரணி –

1.குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000

2.சம வேலைக்கு சம சம்பளம்

3.பணி நிரந்தரத்துக்கான திட்டம்

4.ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ., கிராஜுவிட்டி, போனஸ்

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவர்க்கும் விருதுநகர் மாவட்ட சங்கத்தின்  புரட்சிகர நாள் வாழ்த்துக்கள்  
மேலும் புகைப்படங்கள் பார்க்க :Click Here

இலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி என்ற இடத்தில் தோழர் பார்வதி நாதன் அரங்கில் AIBDPAசங்கத்தின் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் S.மோகன் தாஸ் அவர்களின் தலைமையில் பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் S.செல்லப்பா மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் 21ஆம் தேதி கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாகர்கோவில், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்ட AIBDPA சங்கங்கள் இணைந்து நடத்திய அந்த மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட BSNL ஊழியர் சங்கம், மாவட்ட செயலாளர் தோழர் N.சூசை மரிய அந்தோணி தலைமையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த மாநில மாநாட்டில் தோழர் P.மாணிக்க மூர்த்தி தலைவராகவும், தோழர் C.K.நரசிம்மன் மாநில செயலாளராகவும், தோழர் S. நடராஜா மாநில பொருளாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய மாநில சங்கத்தின் பணி சிறக்க விருதுநகர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
Image may contain: text
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 5 people
Image may contain: 4 people
Image may contain: one or more people
Image may contain: 1 person
Image may contain: one or more people, crowd and indoor
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, crowd and indoor
Image may contain: 1 person
Image may contain: 1 person

BSNLEU சங்கத்தின் இடைவிடாத மார்க்கெட்டிங் பணி

ன்று மாலைவிருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமமான  குமாரலிங்கபுரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில்  மாவட்ட செயலர் ரவிந்திரன் , மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் , கிளைச் செயலர் மாரிமுத்து , முன்னணி தோழர் ராஜேந்திரன் ,ஓட்டுனர் முனியசாமிமற்றும் செக்யூரிட்டி தோழர் ரவீந்திரன்  ஆகியோர் பங்கேற்றனர் .1 மணி நேரத்தில் 53 சிம்கள் அங்கு விற்பனை செய்யப்பட்டது.
Image may contain: one or more people, people sitting and people standing
Image may contain: one or more people
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people standing

மெகா மேளா

நேற்று  மாவட்ட செயலர் நமது தோழியர்கள் பாண்டியம்மாள் , பாண்டி செல்வி , மேரி மற்றும் ஓட்டுனர் முனியசாமி உடன் மெகா மேளாவில் W புதுப் பட்டியில் கலந்து கொண்ட நிகழ்வு. இங்கு  138 சிம்கள் விற்கப்பட்டன
Image may contain: 3 people, outdoor
Image may contain: 3 people, people sitting
நேற்றைய மெகா மேளாவில்  சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் 170 சிம்கள் விற்க்கப்பட்டது மட்டுமன்றி 11 பிராட்பேண்ட இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளது .தோழர் சமுத்திரகனி மற்றும் கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மல்லாங்கிணற்றில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 11 சிம்கள்களும் ,சுந்தரபாண்டியம் பகுதியில் நமது மாவட்ட உதவி செயலர் பங்கேற்ற நிகழ்வில் 57 சிம்களும் விற்பனை செய்யப்பட்டு  உள்ளது .

சிம் விற்பனையில் தனியொருவன்

Image may contain: 2 people
நேற்றைய மெகா மேளாவில்  கோட்டூர் மற்றும் A .புதுப்பட்டி பகுதிகளில் தனியொருவனாக நமது சங்க முன்னணி ஊழியர் ராஜேந்திரன் 175 சிம்களை விற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .இவர் நமது அனைத்திந்திய மாநாட்டில் செந்தொண்டராக பணியாற்றியவர் .இந்த  அற்புத தோழனை மார்க்கெட்டிங் பணிகளில் தொடர்ந்து முத்திரை பதிப்பதை பாராட்டுவோம் . வாழ்த்துவோம் .

Tuesday, February 21, 2017

சபாஷ் தோழியரே !

சபாஷ் தோழியரே !

நமது GM அலுவலகத்தில் கடந்த 03/03/2016 அன்று பரிவு அடிப்படையில் RM கேடரில் பணி நியமனம் பெற்ற  தோழியர் D.மேரி .அந்த தோழியர் தனது சொந்த கிராமமான W .புதுப்பட்டியில் தனி நபராக நமது BSNL சிம்களை விற்பதற்கு வீடு வீடாக கேன்வாஸ் செய்து இன்று 5 மணி கால அவகாசத்தில் 199 சிம்களை விற்பனை செய்தார் . அவருடைய வயசு 48. இந்த வயதில் அதுவும் பணி நியமனம் பெற்று 1 வருடம் கூட ஆகாத நிலையில் கூட    FORUM எடுத்த முடிவை நான் செய்கிறேன் என்ற அந்த தோழியருக்கு நெஞ்சு  நிறை  பாராட்டுக்கள் .அவருடன் துணை புரிந்த தோழியர் பாண்டிசெல்விக்கும் பாராட்டுக்கள் .மாவட்ட செயலர் ரவீந்திரன் அவர்களும் அவர்களுடன் இந்த பணிக்கு துணை நின்றார் .

FORUM முடிவை அமல்படுத்துதல்

FORUM முடிவை நடைமுறைபடுத்தும்  பணியை நமது தோழர்கள் செவ்வனே தொடங்கி விட்டனர் .17/02/2017 அன்று திருச்சுழியில் தோழர்கள் மதி கண்ணன்  கணேசமூர்த்தி பங்கேற்க நிகழ்வில் 104 சிம்களையும்  20/02/2017 அன்று ராஜபாளையத்தில் நமது தோழர்கள் பொன்ராஜ ,அனவ்ரதம் ,ராதாகிருஷ்ணன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் பங்கேற்ற நிகழ்வில்  152 சிம்களையும் ,சிவகாசியில் 54 ம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் குரூப்ஸ் பகுதியில் தோழர் தங்கதுரை பங்கேற்ற நிகழ்வில் 57 ம் விற்பனை செய்துள்ளனர் .இது தவிர்த்து தரைவழி இணைப்புக்களை பெறும் பணியையும் தொடங்கிவிட்டனர் .கிளை பொதுக்குழுவில் எடுத்தமுடிவை அமல்படுத்தும் ராஜபாளையம் ,சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளுக்கு பாராட்டுக்கள் .கிடைத்த  தகவல்கள் அடிப்படையில் இன்னும் அதிக அளவில் ஊழியர்களை பங்கேற்க செய்வதில் அனைத்து கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் முனைப்போடு செயல்பட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொது குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொது குழு கூட்டம் 20/02/2017 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மறைந்த தோழர்களுக்கு மூத்த தோழர் தங்கவேலு நினைவஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் 1நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்பின்னர் FORUM முடிவுகளை அமல்படுத்துவது , மாநில மாநாட்டு நண்கொடை ,ஸ்தல மட்ட பிரச்சனைகள் விரிவாக விவாதிக்க பட்டது .அனைத்து ஊழியர்களும் மார்க்கெட்டிங் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது .மார்ச் 9 பேரணியில் அனைவரும் பங்கேற்க உறுதி கூறப்பட்டது .இக் கூட்டத்தில் கிளை செயலர் சமுத்திரம் ,மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் தங்கதுரை ஆகியோர் உரை நிகழ்த்தினர் .கிளை பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறி பொதுக்குழுவை நிறைவு செய்தார் .
Image may contain: 2 people, people sitting
Image may contain: 6 people, people sitting
Image may contain: 1 person, sitting
Image may contain: 1 person, standing and sunglasses

Saturday, February 18, 2017

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

17/02/2017 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது ..மறைந்த தோழர் முத்துராமலிங்கம்அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது . கிளை செயலர் தோழர் பொன்ராஜ் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,முருகன் ,வேலுச்சாமி ,பிச்சை ஆகியோர் பிரச்சனைகளை சுட்டி காட்டி விவாதத்தில் பங்கேற்றனர் .ஏற்கனவே மார்க்கெட்டிங் பணிகளில் சிறப்பாக பணி புரியும் ராஜபாளையம் தோழர்கள் FORUM முடிவுகளை அமல்படுத்துவதில் சிறப்பான பங்கை வகிக்கும் என அனைவரும் உறுதி கூறினர் 8 வது .அனைத்திந்திய மாநாடு பிரதிபலித்த விஷயங்களை மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி சுட்டிக்காட்டி பேசினார் .FORUM முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக விளக்கினார் .மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக மேலும் ரூபாய் 6000/- ஐ மாவட்ட சங்கத்திடம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம்  வழங்கினார் .அதே போல் பணி நிறைவு செய்த தோழியர் மாரியம்மாள் அவர்கள் மாவட்ட ,மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting

Friday, February 17, 2017

35ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆய்படு பொருட்கள்

35வது தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டிய ஆய்படு பொருட்களாக ஊழியர் தரப்பு செயலாளர் தோழர் P.அபிமன்யு தொகுத்து வழங்கியுள்ள பிரச்சனைகள்.படிக்க :-Click Here

BSNLன் புத்தாக்கத்திற்காக கூடுதல் ஒரு மணி நேர சேவை....

விருதுநகர் மாவட்டத்தில் ஒருமணி நேர கூடுதல் பணிக்கான பணிகள் துவங்கியது.மாநில  சங்க சுற்றறிக்கை படிக்க :-Clcik Here

ஆர்ப்பாட்டம்

கேபிள் பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு SKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டம் 
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing

FORUM முடிவுகளுக்கு சிறப்பூட்டிய சிவகாசி பொதுக்குழு கூட்டம்

சிவகாசி பொதுக்குழு  கூட்டம் 16/02/2017அன்று கிளை தலைவர்கள் தோழர்கள் ராஜாராம் மனோகரன் மற்றும். ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .FORUM முடிவுகளை அமல்படுத்துவது ,மாநில மாநாட்டு நன்கொடை ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,கிளை மாநாடு ஆகியவற்றை பொதுக்குழு விவாதித்தது .கிளை செயலர்கள் தோழர் முத்துசாமி மற்றும் தோழர் கருப்பசாமி  அவர்கள் ஆய்படு  பொருளை விளக்கி பேசினர் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .அதன் பின் பேசிய மாவட்ட செயலர் வரும் 31/03/2017 வரை ஒரு மணி நேர கூடுதல் பணி செய்வதின் அவசியத்தையும் ,வரும் மார்ச் 9 தேதி மாவட்ட ஆட்சி அலுவலகம்  நோக்கிய பேரணியை வெற்றி அடைய  செய்ய வேண்டிய  நோக்கத்தையும் விரிவாக கூறினார் .கேபிள் பகுதி ஊழியர்களுக்கு SKILLED ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 10 ஆம் தேதி GM அலுவலகம் முன் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் .கிளை பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் .
எடுக்கப்பட்ட முடிவுகள் :-
1. திங்கட்கிழமை  மற்றும் சனிக்கிழமை தோறும் ரோடு ஷோ நடத்துவது 
2.புதன்கிழமை தோறும் லேண்ட் லைன் மற்றும் இணைய தள இணைப்புகளை பெற  இயக்கம் நடத்துவது .
3.மாநில மாநாட்டு நன்கொடையாக தலா 100/- ரூபாய் உறுப்பினர்களிடம் வசூல் செய்வது 
4. கிளை மாநாட்டை 24/06/2017 அன்று தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவுடன் இணைத்து நடத்துவது .
Image may contain: 2 people, people standing and people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting, people standing and indoor
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people sitting

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...