Wednesday, February 25, 2015

தேசப் பற்றுடன் 'SAVE BSNL' 'SAVE NATION' என்று முழக்கமிட்டபடி MARCH TOWARDS THE PARLIAMENT >>>>> >>>>>>>>>>>






























தியாகத்தின் திரு உருவம் மறைந்தது....வீரவணக்கம் தோழரே..Red salute.


          ஒரு நுற்றாண்டு காலம் சமூகத்தை ஆதர்ஷிக்க ஒருவரால் இயலுமா, இயலும் என்பதை இந்த உலகிற்கு தன் வாழ்கையின் மூலம் நிறுவி சென்றுள்ளார் ஒருவர். சுதந்திர போராட்ட தியாகி, இளம் கம்யூனிஸ்ட்டாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிவரை அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தோழர் ஐ.மாயாண்டி பாரதி மதுரையில் நேற்று (24-02-2015) காலமானார். அவருக்கு வயது 98. தனது 15வது வயதில் இருந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடர்ந்து மதுரை, வேலூர், சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற சிறைகளிலேயே தனது இளமைக்காலத்தை கழித்துள்ளார். ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பதாகவே அவரது வாழக்கை இருந்தது என்பதை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை பெருமையாக கருதுவோம். தன் மரணம் வரை மதுரையில் தொடர்ந்து கூட்டங்களில் பேசி தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் சுதந்திர போரின் அவசியம் இந்த நாட்டில் வந்து விட்டது என்பதை அவர் உரக்க அறிவித்து விட்டுத்தான் விடைபெற்றுள்ளார்.
(புகைப்படம் : முத்துக்கிருஷ்ணன்)

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மக்கள் மன்றத்தில் நமது சங்கப் பிரதிநிதி

         இன்சூரன்ஸ் அவசச் சட்டம் தேச நலனுக்கு உதவுமா? என்ற தலைப்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் “மக்கள் மன்றம்” ஒன்றைக் கூட்டியிருந்தது. நேற்று (24/02/2015) நடைபெற்ற இந்த மக்கள் மன்றத்தில் வணிகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் பங்கேற்றனர்.
          இந்த மக்கள் மன்றத்தில் இன்சூரன்ஸ் “அவசரச் சட்டம் தேச நலனுக்கு எதிரானதே” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறையினைச் சீரழிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் எதுவாயினும் அது தேச நலனுக்கு விரோதமானதே என்ற கருத்தினை வலியுறுத்தி BSNLEU விருதுநகர் மாவட்டத் துணைத்தலைவர் தோழர் A.கண்ணன் விவாதத்தில் கலந்து கொண்டார்.









டெல்லி பேரணிக்காக...

          BSNLஐக் காப்போம் - கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட 1 கோடி கையைழுத்துக்களை இந்தியப் பிரதமரிடம் ஒப்படைப்பதற்காக இன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக நமது மாவட்டத்தில் இருந்து 16 தோழர்கள் டெல்லி நோக்கிப் பயணப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பயண் வழியின் சில காட்சிப் பதிவுகள்.













11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...