
விருதுநகர் மாவட்டத்தின் 9 ஆவது மாவட்ட மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தியாகிகளின் தியாக தீபத்தூணில் அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் செல்லப்பா ஒளி ஏற்றி வைக்க தியாகிகளுக்கான அஞ்சலியுடன் தொடர்ந்தது. அரங்கத்தில் இராஜபாளையம் தோழர் ராதாகிருஷ்ணனின் அஞ்சலை உரையாற்ற, அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிளைச்செயலர் தோழர்
பொன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடக்கவுரையாற்றி மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.