Tuesday, August 29, 2017

6வது மாவட்ட செயற்குழு

விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 6வது மாவட்ட செயற்குழு கூட்டம் 28/08/2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை  மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் வாசிக்க ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .மாவட்ட செயற்குழுவை தொடங்கிவைத்து மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் ஒரு அற்புத உரை நிகழ்த்தினார் ..மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி வாழ்த்துரை வழங்க ,மாவட்ட செயலரால் சமர்ப்பிக்கப்பட்ட விவாத குறிப்பின் மேல் ஒரு விரிவான விவாதம் நடைபெற்றது .விவாதத்தில் அனைவரும் பங்கேற்றனர் மாவட்ட செயற்குழு முடிவுகள் 
1.9 வது மாவட்ட மகாநாட்டை வரும் மே மாதம் 2018 இல் தோழர் முத்துராமலிங்கம் நினைவாக ராஜபாளையத்தில் நடத்துவது .
2.கிளை மாநாடுகளை கீழ் கண்ட தேதிகளில் நடத்துவது .
செப்டம்பர் 8 -ஸ்ரீவில்லிபுத்தூர் 
செப்டம்பர்  9- அருப்புக்கோட்டை 
செப்டம்பர்11- சாத்தூர் 
செப்டம்பர் 23- ராஜபாளையம் 
3.ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பாக தோழர்கள் ராமசந்திரன் மற்றும் வேலுச்சாமி ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள்  ஜெயபாண்டியன் ,சந்திரசேகரன் ,பெருமாள்சாமி மற்றும் அய்யாசாமி அவர்களை நமது செயற்குழுவில் நிரந்தர பார்வையாளர்களாக அனுமதிப்பது . 
4.நவம்பர் மாதம் நடைபெற உள்ள டெல்லி தர்ணா போராட்டத்திற்கு மாநில  சங்கம் நிர்ணயித்த அளவிற்கு ஊழியர்களை திரட்டுவது .
5.மாவட்ட செயலருக்கு  சொந்த பணி இருப்பதால் வரும்   அக்டோபர் 10 முதல் நவம்பர் 24 வரை மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி பொறுப்பு மாவட்ட செயலராக செயல்படுவார் .
6. ஒழுங்கீனமற்ற செயல்களில் தொடரந்து ஈடுபடும் மாவட்ட சங்க  நிர்வாகிக்கு விளக்க கடிதம் கொடுப்பது .
7. மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் JTO ஆக பதவி உயர்வு பெற்று செல்வதால் அப் பதவிக்கு ராஜபாளையம் கிளை தோழர்  G.வெள்ளை பிள்ளையார்  நியமிக்க பட்டு உள்ளார் .
                     மாவட்ட பொருளர் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது .
Image may contain: 2 people, people smiling, people standing
Image may contain: 3 people, people sitting
Image may contain: 3 people, people sitting
Image may contain: 10 people, people smiling
Image may contain: 5 people, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: 3 people, people smiling, people sitting
Image may contain: 5 people, people sitting
Image may contain: 3 people, people smiling
Image may contain: 4 people, people sitting
Image may contain: 6 people, people standing
Image may contain: 2 people, people standing

Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 13 people, people smiling, shoes and indoor

Wednesday, August 23, 2017

ஆட்குறைப்பு எதிர்ப்பு தினம்

BSNLCCWF சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி இன்று விருதுநகர் மாவட்டத்தில் ஆட்குறைப்பு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது .அதன் படி மாவட்டத்தில் விருதுநகர் ,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்மற்றும் அருப்புக்கோட்டை   ஆகிய ஊர்களில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing
Image may contain: one or more people and people standing
Image may contain: 6 people, crowd and outdoor
Image may contain: 3 people

Tuesday, August 22, 2017

சுற்றறிக்கை எண்:16

BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு மற்றும் இதர செய்திகள்  படிக்க :-Click Here

மாவட்ட செயற்குழு

விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் விருதுநகரில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில  செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட செயற்குழுவை தொடங்கிவைத்து உரை நிகழ்த்துவார் .
ஆய்படு பொருள் :
1.அமைப்பு நிலை 
2.கிளை மாநாடுகள் 
3.JCM /work committee சார்ந்த பிரச்சனைகள் 
4.மாவட்ட மாநாடு 
5.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...