Sunday, April 27, 2014

சிவகாசியில் "பைபர் டூ தி ஹோம்'; பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

            பி.எஸ்.என்.எல்., சார்பில்,சிவகாசியில் ,அதிவேக இன்டர் புதிய சேவையாக, "பைபர் டூ தி ஹோம்' அறிமுகம் செய்துள்ளனர்.தொலை தொடர்பு துறையில், காலத்திற்கு ஏற்ப, புதிய தொழில் நுட்பங்கள் எது வந்தாலும், தொழில் நகரான சிவகாசியில் அறிமுகம் செய்வது வாடிக்கை. கடந்த ஆண்டுகளில் 3ஜி சேவை ,மாவட்டத்திலே முதன்முறையாக சிவகாசி, விருதுநகரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது புதிய தொழில் நுட்பத்திலான "பைபர் டூ தி ஹோம்' என்ற அதிவேக இன்டர்நெட் சேவை, மாவட்டத்திலேயே முதன்முறையாக, சிவகாசியில் அறிமுகம் செய்துள்ளது, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம். தற்போது பி.எஸ்.என்.எல்., இன்டர் நெட் சேவை, காப்பர் கேபிள் மூலம் டெலிபோன் இணைப்புகளுடன் சேர்ந்து வழங்கப்படுகிறது. இதில், 24 எம்.பி.எஸ்., (மெகாபிட் பெர் செகண்ட்) என்ற அளவில், கிடைக்கிறது. அதிலும், தொடர்பு நிலையம் சுற்றி, 500 மீட்டர் சுற்றளவில் தான், இந்த 24 எம்.பி.எஸ்.,அளவு நெட் வசதி கிடைக்கும். அதற்கு மேல், அளவு குறைந்து, நீண்ட தூரத்தில் உள்ள நெட் இணைப்புகளுக்கு, 8 எம்.பி.எஸ்., அளவுகளில் கிடைக்கிறது. மேலும், காப்பர் வயர்கள் பழுதடைவதும், அதை சரி செய்ய ஒட்டுப்போடுவது போன்ற காரணங்களால், அதிவேக சேவை வழங்கமுடியாத நிலை உருவானது.
          சிவகாசியில் உள்ள பல பிரின்டிங் ஆப்செட்களுக்கும், பட்டாசு நிறுவனங்களுக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை மிக அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு, ஒரு வினாடியில், 100 மெகாபிட்ஸ் பதிவிறக்கம் செய்யும் வகையில், ஆப்டிக்கல் பைபர் மூலம், அதிவேக இன்டர்நெட் சேவையை, ஏப்ரல் முதல் பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. ஹையர் பிராட்பாண்ட் சேவை பயன்படுத்தும்,அடுக்குமாடி குடியிருப்புகள், அப்பார்ட் மென்ட்களில் வசிப்போர், கல்வி நிறுவனங்கள், இச் சேவை பெறலாம். ஒரு ஆப்டிக்கல் பைபரில், 16, 32 இணைப்புகள் வழங்கலாம். இதற்காக, சிவகாசி பகுதியில், ஆப்டிக்கல் பைபர் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10, 20, 50, 100 என்ற அதிவேக எம்.பி.பி.எஸ்., பிளான்கள் அறிமுகம் செய்துள்ளனர். இதற்கான ஒரு மாத கட்டணம் ரூ.3999, 5999, 9999, 16,999 என்ற விகித்திலும், கூடுதலாக மோடத்திற்கு கட்டணம் ரூ.150 வீதம் செலுத்த வேண்டும். ""இச் சேவை பெற விரும்புவோர், சிவகாசி சேவை மையத்தினை, 04562 221 600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்,'' என, தொழில் நுட்ப அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி :-தினமலர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...