Tuesday, August 26, 2014

எழுச்சிமிகு ஒப்பந்த ஊழியர் தர்ணா போராட்டம்

      ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய சங்கத்தின் போராட்ட அறைகூவலின் ஒரு பகுதியாக  தர்ணா போராட்டம் இன்று விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் M .செல்வராஜூ பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  தோழர் A .சமுத்திரகனி அவர்களின் கூட்டு தலைமையின் கீழ் நடைபெற்ற தர்ணாவை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R .முனியசாமி தொடக்கி வைத்து  பேசினார் . நமது தமிழ் மாநில உதவி செயலர் தோழர் .C .பழனிசாமி அவர்கள் கோரிக்கைகளை விளக்கி விரிவாக உரை நிகழ்த்தினார் .மாவட்டம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .சிறப்பாக அணி திரட்டிய அனைவருக்கும் இரண்டு மாவட்ட சங்கங்களின் சார்பாக  நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...