Wednesday, May 21, 2014

கண்ணீர் அஞ்சலி

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்


         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93. உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த அவர்  திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுபினர்களில் ஒருவரான இவர் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார்.1962 முதல் 1965 வரை புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1980 வரை நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கு பேரிழப்பாகும். அவர் தம் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...