Tuesday, May 13, 2014

2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

        நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட செயற்குழு தோழர் சமுத்திரகனி, மாவட்ட தலைவர் தலைமையில் சிவகாசியில் நடைபெற்றது. தோழர் M.முத்துசாமி, மாவட்ட துணைச்செயலர் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, தலைவர்  தலைமை உரை நிகழ்த்தினார். நமது மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளில் பெரும் தேக்கம் உள்ளதை அவர் சுட்டி காட்டினார். ஸ்தலமட்ட பிரச்சனைகளை அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழுவில் சுட்டி காட்டினர். மாவட்ட செயலர் சமர்ப்பித்த அறிக்கையின் மீது விவாதம் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மாநாட்டிற்கு சார்பாளர்களாக தோழர் ரவீந்திரன், தோழர் சமுத்திரகனி, தோழர் முத்துராமலிங்கம், TTA ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பார்வை யாளர்களாக  8 தோழர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களை அனுமதிப்பதில் மாநில மற்றும் அகில இந்திய சங்கங்கள் காட்டும் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும். லாங்ஸ்டே மாறுதல்கள் பற்றி ஒரு முறை நிர்வாகம் நமது  சங்கத்தையும், NFTE சங்கத்தையும் அழைத்து விவாதித்துள்ளது. மீண்டும் விவாதம் 16-5-2014 அன்று நடைபெற உள்ளது. RGB தேர்தலில் 2 இடங்களையும் நாம் வெற்றி பெற்றதற்கு அனைத்து நிர்வாகிகளையும் மாவட்ட சங்கம் மனதார பாராட்டியது. 30-8-2014 அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சிவகாசியில் தோழர் செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பணி ஒயவு பாராட்டு விழாவோடு இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழுவிற்கு வந்த அனைவருக்கும் விருந்து தந்து உபசரித்த மாவட்ட உதவி தலைவர் தோழர் G .ராஜு அவர்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. 31-05-2014 அன்று பணி ஓய்வு பெற உள்ள தோழர் ராஜாகனி அவர்கள் மாவட்ட சங்கத்தால் கௌரவிக்கபட்டார்.வொர்க் கமிட்டி பொறுப்பில் இருந்து தோழர் சந்திரசேகரன்  விடுவிக்கபட்டு தோழர் U .B .உதயகுமார் ,SSS அவர்கள் நியமிக்க படுவதற்கு மாவட்ட செயற்குழுவில் உரிய ஒப்புதல் பெறப்பட்டது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...