Friday, November 16, 2012

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

விருதுநகர் மாவட்டத்தில் 100 விழுக்காடு உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வைத்த ஒரே கிளையான சாத்தூர் கிளை - செயலருக்கும், உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தின் காரணமாக சாத்தூர் CSC மூடப்பட்டது. சாத்தூர் CSC தொலைபேசி நிலைய வளாகத்திற்கு உள்ளே இருப்பதால் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தின் பிரதான வாசல் மூடப்பட்டு இன்று வேலைநிறுத்தம் என எழுதி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள்
தூத்துக்குடி SSA       : திருச்செந்தூர்
நாகர் கோயில் SSA    : நாகர் கோயில் 2 மையங்கள்
  கன்னியா குமரி
                          நெய்யூர்
                          கரிங்கால்
நீலகிரி SSA           : அனைத்து மையங்களும்
மதுரை       : மதுரை மத்திய தந்தி அலுவல அனைத்து மையங்களும்
                 TVS நகர்
                 உயர் நீதி மன்ற மையம்
விருதுநகர் SSA        : சாத்தூர்

கடலூர் மற்றும் தர்மபுரி SSAக்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100% வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வாழ்த்துகள்.
பிற SSAக்களிலும் பெரும்பாண்மையான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
எந்தச் சூழ்நிலையிலும், வர்க்க உணர்வோடு தோளோடு தோள் நிற்கும் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

தமிழகத்தில் வேலைநிறுத்தம்

விருதுநகர் – 55.74%
மொத்தம்       : 287
வேலை நிறுத்தம்     : 160
விடுப்பு         :  71
பணி            :  56

கடலூர் – 71.92%
மொத்தம்       : 261
வேலை நிறுத்தம்     : 187
விடுப்பு         :  36
பணி            :  38
ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

தர்மபுரி – 96.5%
மொத்தம்       : 320
வேலை நிறுத்தம்     : 309

நீலகிரி – ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

            நாகர்கோயில் மாவட்டத்தில் SEWA உறுப்பினர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாகர்கோயில் தொலைபேசி நிலையத்தின் முன்னால் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். AIBSNLEA உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
        சூழலைப் பயன்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டு நடத்திய நாகர்கோயில் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...