Thursday, November 26, 2015

ஒப்பந்த ஊழியர் சங்க முதல் செயற்குழு கூட்டம்

ஒப்பந்த ஊழியர் சங்க முதல் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் இளமாறன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .EPF நிலுவை தொகை விசயமாக மாநில சங்கத்தின் வழிகாட்டல் மூலம் உரிய கடிதம் கொடுப்பது .ESI கார்டு வழங்கப்படாத அனைவருக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி  விருதுநகரில்  வைத்து புகைப்படம் எடுக்கும் பணியை நிறைவேற்றுவது விசயமாக ஒப்பந்ததாரரிடம் பேசுவது .மாவட்ட சங்கத்தின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதை சரி செய்ய மாவட்ட சங்கம் அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் வரும் டிசம்பர் மாதம் தலா ரூபாய் 20/- வசூல் செய்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் வழங்கி விட வேண்டும் . இரு வேறுபட்ட ஒப்பந்த பணியை ஒருவரே செய்யும் நிலை சரி செய்யப்பட்ட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது . அதில் வரும் பிரச்சனைகளை மாவட்ட சங்கம் ஏற்று கொள்ளாது என முடிவு எடுக்கப்பட்டது .அடுத்த செயற்குழு கூட்டம் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி சிவகாசியில் நடைபெறும் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...