Thursday, March 20, 2014

குஷ்வந்த் சிங் காலமானார்

      குஷ்வந்த் சிங் | கோப்புப் படம்
     பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் நையாண்டித்தனமும் அழுத்தமான கருத்துகளும் பொதிந்திருக்கும்.யோஜனா என்ற பத்திரிகையை நிறுவியவர். தி இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா, தி நேஷனல் ஹெரால்டு, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.ட்ரெயின் டூ பாகிஸ்தான், ஐ ஷேல் நாட் ஹியர் தி நைட்டிங்கேல், டெல்லி உள்ளிட்ட இவரது படைப்புகள் காலம் கடந்து பேசுபவை.குஷ்வந்த் சிங் தனது 95-வது வயதில் 'தி சன்செட் கிளப்' என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதையை 2002-ல் பெங்குவின் புக்ஸ் வெளியிட்டது.1980-ல் இருந்து 1986 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1974-ல் இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஆனால், அவ்விருதை 1984-ல் அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார். பொற்கோயிலில் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே விருதை திருப்பித் தந்தார். பின்னர், 2007-ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
                               < தி ஹிந்து >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...