Wednesday, March 12, 2014

இப்போதே ஆரம்பிச்சு…

ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ் சாலையில், சக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு முன்னர் நான்கு வாகனங்கள் நின்றது மக்கள் கூட்டம்.ஏதோ விபத்து ஏற்பட்டு விட்டதா என்று பார்வையிட சென்றபோது,சுமார் 40 வயது மதிக்கதக்க நபர் படுத்து கிடந்தார்.
ஏதோ வாகனத்தில் அடிபட்டு விட்டார் என்று நினைக்கும் போது,அருகில் இருந்தவர் 108 ஆம்புலன்ஸ் போன் போடுங்கள் என்றார்.அப்போது எனது கைபேசியை எடுத்து 108 நம்பருக்கு போன் போடும் போது கால் சென்டர் இனைப்பு கிடைத்தது. விபரம் கூறும் போது,அருகில் இருந்தவர்கள் தண்ணி அடித்து விட்டு படுத்து இருக்கிறான் என்றார்கள்.உடனே நான் கால் சென்டர் பெண்ணிடம் மன்னித்து விடுங்கள் தவறுதலாக போன் பண்ணிவிட்டேன் என்று கூறி இனைப்பை துண்டித்து விட்டேன்.
அதன்பிறகு அருகில் இருந்தவர்களிடம் ஏம்பா மெயின்ரோட்டில் விழுந்து கிடக்கிறானே தூக்கி அருகில் படுக்க வைக்கலாமே என்றேன்அதற்கு அவர்கள் இவன் தண்ணியும்,கஞ்சாவும் சேர்ந்து போட்ட மப்புல இருக்கான் பாரு என்றார்கள்.அருகில் காவல் நிலைய பெண்மணி பைக்கில் வந்தார்என்ன என்று கேட்டார் தண்ணி அடிச்ச மப்புல மறியல்ல இருக்கான் என்று ஒருவர் கூறியவுடன் அந்த காவல் பெண்மணியும் அதே வேகத்தில் சென்றார்.
அதன் பின்பும் அருகில் இருந்தவர்களிடம் வப்பா தூக்கி ஒரத்தில் படுக்க வைக்கலாம் என்று கூறியபோது யாரும் வரவில்லை.அவன் போதை தெளிச்ச உடனே போய் விடுவான் என்றார்கள்.உடனே நான் ஏலே கம்பு எடுடா,
ரெண்டு வெழுத்து வெழுத்தலாம் என்றேன்பார்க்கலாம் - உடனே கண்ணை திறந்தான்அடுத்து நைசா எழுந்து ஒரத்திலே போய் படுத்துக் கொண்டான்.
அப்போது தான் எங்க ஆத்தா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்,பாடுற மாட்டை பாடி கறக்கனும் என்பது.

குறிப்பாக அவன் படுத்து இருக்கும் சாலை தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலைஅதிலும் அதிக அளவில் வாகனம் செல்லும் சாலை இதில் ஒருவன் படுத்து இருக்கான் அவனை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேதனை.
இப்படியானவர்கள் அட்டுழியம் என்றைக்குத்தான் ஒழியுமோ தெரியவில்லைஇனி தேர்தல் நேரத்தில் என்னவெல்லாம் இவங்களால நடக்கப்போகுதோ தெரியவில்லை.
தேர்தல் கமிஷன் கவனத்திற்கு
பிளாஸ்டிக் தடைசெஞ்சாங்க, விளம்பரத்தை தடைசெஞ்சங்க, எதை, ஏதையோ தடைசெஞ்சாங்க, தேர்தல் நேரத்தில் இந்த டாஸ்மாக் கடையை தடைவிதித்த நீங்க நல்லா இருப்பீங்க.
- ஆண்டிப்பட்டி பாண்டி

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...