Tuesday, March 11, 2014

மகாராஷ்டிரா மாநில மாநாடு

             
           நமது பிஎஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 2 நாள் மகாராஷ்டிரா மாநில மாநாடு, 09.03.2014 அன்று அகமது நகரில் தொடங்கியது. மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊழியர் சங்கத்தின் கொடி மாநிலத் தலைவர் தோழர் நாகேஷ் நலவாடே (Nagesh Nalawade), அவர்களால் ஏற்றி வைக்கபட்டது. சங்க கொடி வரவேற்பு குழு செயலாளர் விட்டல் ஔட்டி அவர்களால் ஏற்றி வைக்கபட்டது. 527 பிரதிநிதிகள், 45 பார்வையாளர்கள் மாநாட்டில் கலந்து .கொண்டனர். மாநாட்டில் பொதுச்செயலர தோழர் P.அபிமன்யு, மகாராஷ்ட்ரா தலைமைப் பொது மேலாளர் திரு. ஆனந்த் குல்கர்னி, தோழர் அஜித் அபயங்கர் (சிஐடியு) தோழர் மாநிலத் தலைவர் நாகேஷ் நலவாடே மாநில தலைவர் மற்றும் தோழர கௌண்டே (மாநில அரசு ஊழியர் சங்கம்) உரையாற்றினர்.

              மாநிலச் செயலர் தோழர் ஜீடாம் செயல்பாட்டறிக்கையினை முன்வைத்தார். பிரதிநிதிகளின் அறிக்கை மீதான கருத்துக்களை தொடர்ந்து, பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யு விரிவாக பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார். புதிய தாராளவாத கொள்கைகளுக்கு எதிராக போராட சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த முயற்சி தேவை என்பதை வலியுறுத்தினார்.
புகைப்பட தொகுப்பு பார்க்கClick Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...