Wednesday, January 8, 2014

பொதுச் செயலரின் பணி ஓய்வு பாராட்டு விழாவில்...

  







      07-01-2014 சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் செயலர் தோழர் அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு நமது மாவட்டத்தில் இருந்து 6 தோழியர்கள், 6 ஒப்பந்த ஊழியர்கள், 1 அதிகாரி உட்பட மொத்தம் 61 பேர் கலந்து கொண்டனர்.
          திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஊழியர்களைத் திரட்டிய அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறது.
          நடைபெற்ற கருத்தரங்கத்தில் நமது பி எஸ் என் எல் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் திரு A.N.ராய், இயக்குனர் (மனித வளம்), திரு அஸ்ரப்கான், தலைமை பொது மேலாளர், தமிழகம், பாலசுப்ரமணியம், பொது மேலாளர், சென்னை வட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
          திரு A.N.ராய், இயக்குனர் (மனிதவளம்), அவர்கள் பேசியபோது பிஎஸ்என்எல் ஊழியர்கள் வாடிக்கையாளர் அனைவருக்கும் திருப்தியான சேவை செய்ய வேண்டியதின் அவசியத்தையும் நிறுவனத்தை மீட்டு எடுக்க வேலையின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் கூறினார்.
          நமது பொது செயலர் பேசும் போது வேலை கலாச்சாரம் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டி காட்டினார்.
          பின்னர் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது பொது செயலரின் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற தொழிற் சங்க பணிகள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் V.A.N.நம்பூதிரி, CITU அகில இந்திய தலைவர் A.K.பத்மநாபன், தமிழ் மாநில செயலர் செல்லப்பா, சென்னை தொலைபேசி மாநில செயலர் கோவிந்தராஜன் மற்றும் P.சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தோழர் M.முருகையா, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர்,   SNEA கோபிநாதன், வள்ளிநாயகம் (FNTO), சேவா BSNL ரவீந்திரன், NFTE சங்க R.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.
          நமது பொது செயலர்  பயணித்த தடங்களில் நாம் அனைவரும் பயணம் செய்வதே நாம் அவருக்கு  அளிக்கும் பாராட்டுச் செய்தியாகும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...