என்
கண்களுக்குள்ளே
உமது
சிரித்த முகம்...
என்
செவிகளுக்குள்ளே
உமது
குரல்...
காண
துடிக்கிறது நெஞ்சம்..
காணவில்லையே... மாயமென்ன?
காற்றோடு
கலந்தீரோ?...
உற்ற
காலமிதுவோ?
ஆருயிர் நண்பரே...
அன்பை
விதைத்து
அவசரமாய்
சென்றதேன்?
விடையறியா
மீளா துயருடன்...
பிரிவால்
வாடும் நண்பர்களுள்
ஒருவன்
-
செ. வெங்கடேஷ்
No comments:
Post a Comment