உதயமானது பிரிக்ஸ் வங்கி
இந்த வங்கியிலிருந்து உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியைப் பெற முடியும். இந்த வங்கி தவிர 5 நாடுகளும் இணைந்து பிரிக்ஸ் பங்கு கூட்டமைப்பையும் (BRICS Stock Alliance) உருவாக்கவுள்ளன. இதன்மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த 5 நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது எளிதாக்கப்படும். 2016ம் ஆண்டு முதல் இந்த பிரிக்ஸ் வங்கி செயல்பாட்டுக்கு வரும். இந்த வங்கியை உருவாக்குவதில் மிகத் தீவிரம் காட்டியது ரஷ்ய அதிபர் புடின் தான். அப்படி என்ன ரஷ்யாவுக்கு டாலர் பற்றாக்குறையா என்றால் இல்லை. அந்த நாட்டிடம் சுமார் 500 பில்லியன் டாலர்கள் கையிருப்பு உள்ளது. தினந்தோறும் எண்ணெய் ஏற்றுமதியால் டாலர்கள் குவிந்து கொண்டுள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராக, அமெரிக்காவின் சார்ந்த நிதி அமைப்புகளுக்கு எதிராக ஒரு பலமான எதிர் அணியை உருவாக்குவதே அவரது ஒரே குறிக்கோள். இதைத் தான் செய்து காட்டியுள்ளார் புடின். புடினின் இந்த அரசியலால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் லாபம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
< நன்றி :- ஒன் இந்தியா
No comments:
Post a Comment