Tuesday, August 6, 2013

மாவட்ட பொது மேலாளருடன் நேர்காணல்

          06-08-2013 அன்று நமது மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளருடன் நேர்காணல் நடத்தியது.கீழ்கண்ட விஷயங்கள் விவாதிக்கபட்டன..

  1. தாலுகா தலைநகரான திருச்சுழியில் கடந்த 4 மாத  காலமாக ஒரு டெலிபோன் மெக்கானிக்கூட பணியில் இல்லாமல் சேவையை சீரழித்து வருவதை கடுமையாக சுட்டி காட்டி உள்ளோம் .
  2. கொள்கை  சம்பந்தமான விசயங்களை அங்கீகரிகப்பட்ட சங்கங்களுடன் மட்டுமே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
  3. லோக்கல் கவுன்சில் மற்றும் வொர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக கூட்ட வேண்டும் என   வலியுறுத்தி உள்ளோம்.
  4. உடனடியாக TTA காலியிடங்களை அறிவிக்க கூறியுள்ளோம்.
  5. NETWORK மற்றும் நரிக்குடி  wimax பகுதிகளில் TTA நியமனம் செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
  6. சிவகாசி பகுதியில் JTO பற்றாக்குறை உள்ளது என்பதை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.
          08-08-2013 அன்று விருப்ப ஓய்வில் செல்ல உள்ள மாவட்ட பொது மேலாளர் திரு B.V.பாலசுப்ரமணியா  அவர்களை நமது மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நமது மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நினைவு பரிசை வழங்கினார். இன்றைய நேர்காணலின்போது தோழர்கள் R .ஜெயக்குமார், ரசூல், த.முத்துராமலிங்கம், M.முத்துசாமி, M.S.இளமாறன், A.ஜெயபாண்டியன், G.ராஜு, C.சந்திரசேகரன், G.சுந்தரராஜன், M.பெருமாள்சாமி  ஆகியோர் உடன்   இருந்தனர்.





No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...