2 நாட்களாக தொடர்ந்து மாவட்ட செயலர் ,மாவட்ட தலைவர் மற்றும் மாநில சங்க நிர்வாகி சமுத்திரக்கனி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக தோழர் திரு நாராயணன் அவர்கள் மீண்டும் காக்கிவாடன்பட்டி தொலை பேசி நிலையத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் .ஆனால் எரிச்சநத்தம் தொலை பேசி நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் மூர்த்தி அவர்கள் மீண்டும் பணி நியமனம் செய்வதில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தவறான தகவல்களை மாநில நிர்வாகத்திற்கு கொடுத்து உள்ளது .அதனால் அவர் நியமனத்தில் உள்ள தடைகளை உடைக்க வரும் 05/02/2019 அன்று நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார் .நமது தமிழ் மாநில சங்கம் இப் பிரச்சனையை கையில் எடுப்பதால் 2 நாட்களாக தொடர்ந்து மாவட்ட செயலர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது . இரண்டு நாள் போராட்டத்தில் உற்சாகமாக ,தீரமாக பங்கேற்ற அத்துணை தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment