Monday, November 5, 2018

ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் தலையிட CMD BSNLஇடம் வேண்டுகோள்:.

02.11.2018 அன்று DOT செயலாளரிடம் பேச்சு வார்த்தை முடிந்த பின் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் ஆகியோர், BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாக தரப்பில் வீட்டு வாடகைப்படி மாற்றத்தை வழங்க விரும்பாத காரணத்தால் ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதை அவரிடம் தெரிவித்தனர். 31.12.2016ல் இருந்ததை போன்று வீட்டு வாடகைப்படியை முடக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் தலைவர்கள் CMDஇடம் சுட்டிக் காட்டினார்கள். கால தாமதமின்றி ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், BSNL CMD தலையிட்டு, நிர்வாக தரப்பு உறுப்பினர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை தரவேண்டும் என இரண்டு பொது செயலாளர்களும் அவரைக் கேட்டுக் கொண்டனர். ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை கவனித்த BSNL CMD, இதில் ஆவன செய்வதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...