அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக 14/11/2018 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் மெயின் பஜார் வழியாக மேலரத வீதி வந்து தேசபந்து மைதானத்தில் நிறைவு பெற்றது .இந்த பேரணிக்கு SNEA மாவட்ட செயலர் திரு .செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார் .பேரணியில் BSNLEU மாவட்ட செயலர் துவக்க உரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் , AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு ,மணிகண்டன் ,SNEA ராஜபாளையம் கிளை செயலர் திரு .தங்கவேலு ,AIBDPA சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .பேரணியை முறையாக SNEA மாநில சங்க நிர்வாகி திரு கோவிந்தராஜன் அவர்கள் துவக்கி வைத்தார் .இந்த பேரணியில் நமது BSNLEU ஊழியர்களும் ,TNTCWU சங்க தோழர்களும் ,AIBDPA தோழர்களும் ,பெரும் திரளாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .கலந்து கொண்ட அனைவர்க்கும் BSNLEU மாவட்ட சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .



















No comments:
Post a Comment