Wednesday, January 7, 2015

இது முடிவல்ல ஆரம்பம்

அருப்புகோட்டை சுழல் மாற்றம் மற்றும் கேபிள் பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 2 மாத காலமாய் ஊதியம் வழங்காமல் உள்ளதை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாய் கடந்த 2 ஆம் தேதி பெரும் திரள் முறையீட்டை நமது சங்கம் நடத்தியது .அதில் நிர்வாகம் ஒத்து கொண்ட விசயங்களை  மாவட்ட பொது மேலாளர் முதன்மை சங்கமான நமது BSNLEU சங்கத்தோடு எவ் வித ஆலோசனையும் செய்யாது தன்னிச்சை போக்கில் முடிவு எடுத்ததை கண்டித்து இன்று மாவட்ட சங்கம் மதியம் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியது .இரவு 10 மணி வரை நீடித்த உண்ணாவிரத போராட்டம் மாநில சங்க வழிகாட்டலின்படியும் , இப்  பிரச்சனை  தீர்வதற்கு மாநில சங்கம் தக்க துணை நிற்கும் என்ற அடிப்படையில் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஆகவே இது முடிவல்ல ஆரம்பம் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...