Thursday, January 29, 2015

A .கந்தசாமி ,STS பணி ஓய்வு பாராட்டு விழா

   ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர் A .கந்தசாமி ,STS வரும் 31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் சார்பாக சீரும் சிறப்புமாய் 29-01-2015 அன்று தோழர் தங்கதுரை தலைமையில் கிளை செயலர் தோழர் சமுத்திரத்தின் வாழ்த்துரையுடன் தொடங்கியது .கே ஜி போஸ் பாசறையாம் ஈரோடு மாவட்டத்தில் தன பணியை தொடங்கிய தோழர் கந்தசாமி விருதுநகர் மாவட்டத்தில் பணி ஓய்வு பெறுகிறார் .அன்னாரை பாராட்டி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,தோழர் புளுகாண்டி ,தோழர் பெருமாள்சாமி , தோழர் முனியாண்டி ,முது பெரும் தோழர்கள் முத்தையா, மாசானம் ஆகியோர் பேசினர் .மாவட்ட செயலர் வாழ்த்தும் போது BSNL நிறுவனம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளையும் ,BSNL புத்தாக்கத்திற்கு வர உள்ள போராட்டத்தின் முக்கியத்தையும் ,அதை 100% வெற்றியாக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தோழர் கந்தசாமி அவர்களை பாராட்டி பேசினார் .தோழர் ரவிச்சந்திரன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் நிறைவாக செய்தது பாராட்டுக்குறியது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...