Saturday, July 13, 2013

அருப்புக்கோட்டை கிளை மாநாடு















































          அருப்புக்கோட்டை கிளை மாநாடு  13-07-2013 அன்று அருப்புக்கோட்டை தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் U.B.உதயகுமார் கிளை தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. தோழர் R.ஜெயக்குமார், கிளை செயலர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.  தோழர் அஸ்ரப்தீன் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்க உரை ஆற்றினார். நமது மாவட்டத்தில் 5 சங்கங்கள் கூட்டணி அமைத்து நமது சங்கத்தை தோற்கடிக்க முயன்றதை முறியடித்து 3 முறையாக நமது மாவட்டத்தில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்ததை மாவட்ட செயலர் சுட்டி காட்டினார்.மேலும் பணி   கலாச்சாரம் மாற வேண்டும் எனவும், போராட்ட குணத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
          நமது சங்கத்தில் புதிதாக தன்னை முழுமனதுடன் இணைத்துக் கொண்ட கல்லூரணி TM தோழர் கணேசன் அவர்களை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் கௌரவித்தார்.
          சிறப்புரையாக  பேசிய மாநில அமைப்பு செயலர் தோழர் ஜெயமுருகன் தன்னுடைய உரையில் 78.2 IDA இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் மகத்தான பங்களிப்பை கோடிட்டு வரஇருக்கின்ற போராட்ட திட்டங்களை விரிவாக விளக்கினார். BSNLEU  சங்கம் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றது சாதாரண  விஷயம் கிடையாது. எந்த அரங்கிலும் எந்த தொழிற்சங்கமும் அடையாத கின்னஸ் சாதனை நமது வெற்றி என்று அவர் கூறினார். மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி பேசுகையில் நமது மாவட்டத்தில் நம்சங்கம் இல்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் யாராலும் எடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். தோழர் A.கண்ணன்தோழர் C.சந்திரசேகரன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோரும் மகாநாட்டில் உரையாற்றினர். தோழர்கள் U.B.உதயகுமார்R.ஜெயக்குமார்  மற்றும் A.சோலை ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...