Friday, January 25, 2019

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 
மல்லி செக்யூரிட்டி நிறுவனம் 2 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை மாநில மட்டத்தில் GM (SR ) அவர்களிடம் நமது உதவி அனைத்திந்திய பொது செயலர் ,மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுட்டிக்காட்டி பேசியபோது 1 வார கால அவகாசத்தில் விருதுநகர் முதன்மை பொது மேலாளர் தீர்வு காண்பார் என்று கூறி இன்றுடன் 1 வார அவகாசம் முடிந்தது .நிர்வாகத்தோடு கூட பேச மாட்டேன் என்று அந்த நிறுவனம் சர்வாதிகாரமாக நடப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது .2 ஊழியர்களை மீண்டும் பணிக்கு அனுமதித்து உத்தரவு வரும் வரை மாவட்ட செயலர் ரவீந்திரன்  28/01/2019 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார். இப் போராட்டத்தில் நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்களும் இணைய  உள்ளார் .அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் சரியாக காலை 10 மணிக்கு PGM அலுவலகம் முன் திரளுமாறு தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .

Thursday, January 24, 2019

ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை

ஜனவரி 8, 9 தேசம் தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 286  ஊழியர்களில் 122 பேர் வேலைநிறுத்தத்தில் பதிவு செய்துள்ளனர் . அந்த 122 போராளிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேற்கூறிய வேலைநிறுத்தம் அன்று விடுப்பு எடுத்த ஊழியர்கள் எண்ணிக்கை 75. பணியில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 89. வேலை நிறுத்தம் செய்த 122 ஊழியர்களில் 116 பேர் நமது BSNLEU ஊழியர்கள் .5 பேர் NFTE ஊழியர்கள் .1 பெண் ஊழியர் சேவா சங்கத்தை சேர்ந்தவர் .கிளை வாயிலாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நமது ஊழியர்கள் எண்ணிக்கை .

 Branch      Total members        Strike                         லீவு                    டூட்டி  
GM (O)              31                     25                                3                            3
Sivakasi             42                     31                                7                            4
Rajapalayam      39                     19                               17                           3
Aruppukottai      10                       7                                 2                           1
Sattur                  12                     10                                 1                           1
VGR O/D           14                      11                                2                           1
Srivilliputhur      17                      13                                3                           1  
_________________________________________________________________
Total                 165                     116                             35                          14
--------------------------------------------------------------------------------------------------
Strike %
BSNLEU        = 70.30%
NFTE              =  4.80%
கிளை ரீதியாக % நமது ஊழியர்கள் பங்கேற்பு
GM office branch  = 80.64%
சாத்தூர்    = 83.33%
அருப்புக்கோட்டை     =70%
சிவகாசி                          =75.47%
ஸ்ரீவில்லிபுத்தூர்           =76.47%
VGR O/D Branch                =78.57%
ராஜபாளையம்             =48.71%
 ஒட்டு மொத்த மாவட்ட அளவில் :
Strike :- 42.65%
Leave :-26.22%
duty   :- 31.11%
நமது மாவட்ட சங்க நிர்வாகியாக இருந்தவரும் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் JTO ஆக பணி புரியும் தோழர் அஷ்ரப் தீன் இந்த தேச பாதுகாப்பு போராட்டத்தில் பங்கேற்று பதிவு செய்ததை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகிறது 

2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்ற தோழர்களை JE இலாகா தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்- BSNLEU கோரிக்கை

+2 முடிக்காமல் நேரடியாக பட்ட பெற்றவர்களை JE இலாகா தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என ஹைதராபாத் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை பெற்ற தோழர்களுக்கு கடந்த JE இலாகா தேர்வில், இந்த தீர்ப்பு அமலாக்கப்பட்டு விட்டது. இந்த நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்காலத்தில் வரும் JE இலாகா தேர்விலும் அமல்படுத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் 37ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் எழுப்பியது. அப்போது அந்த பிரச்சனையை கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவில் விவாதிக்கலாம் என பதிலளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர் வரும் JE இலாகா தேர்வுகளிலும் அமலாக்க வேண்டும் என 23.01.2019 அன்று Sr.GM(Est) அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

10,000 கோடி ரூபாய் அலைக்கற்றை கட்டணத்தைக் கட்ட வோடோபோன் ஐடியா நிறுவனம் இரண்டு ஆண்டு காலம் கழித்து கட்ட அனுமதி கோரியுள்ளது.

வோடோபோன் ஐடியா நிறுவனம் கட்ட வேண்டிய வருடாந்திர அலைக்கற்றை கட்டணம் 10,000 கோடி ரூபாயை இரண்டு ஆண்டு காலம் கழித்து கட்டுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அந்த நிறுவனம் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறு கோரியுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இதே கோரிக்கையை COAI என்கிற CELLULAR OPERATOR ASSOCIATIONS OF INDIAவும் முதலிலேயே கோரியுள்ளது. இதே போன்ற கோரிக்கையை ASSOCHAMம் ஏற்கனவே முன்வைத்துள்ளது.

Friday, January 18, 2019

உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைப்பு

மல்லி செக்யூரிட்டி நிறுவனம் காக்கிவாடன்பட்டியில் பணி புரிந்த தோழர் திருநாராயணன் அவர்களையும் எரிச்சநத்தம் தொலைபேசி நிலைய காவல் பணி புரிந்த தோழர் மூர்த்தி என்பவரையும் தன்னிச்சையாக பணி நீக்கம் செய்ததை எதிர்த்து மாவட்ட செயலர் 21/01/2019 முதல் தொடங்க இருந்த  உண்ணாவிரதப்போராட்டம் , இன்று நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பா மற்றும் TNTCWU சங்க மாநில தலைவர் தோழர் முருகையா அவர்களும் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் GM (SR) அவர்களுடன் நடத்திய   பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் ,நமது மாவட்ட முதன்மை பொது மேலாளர் வரும் வாரத்தில் இப் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்று நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பா அவர்களிடம் கொடுத்த உறுதி மொழியின் அடிப்படையிலும்  ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .
அடுத்தவாரம் பிரச்சனை தீரவில்லை என்றால் நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன்  தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நமது முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெறும் .

Monday, January 14, 2019

ஒப்பந்த ஊழியர்களை தான்தோன்றித்தனமாக வேலைநீக்கம் செய்யும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம்

தொழிலாளர் சட்டங்களை காலில் போட்டு மிதிக்கும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம் 
காக்கிவாடன் பட்டி தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டி பணி புரிந்த திருநாராயணன் என்பவரை நீக்கி விட்டு தற்போது புதிதாக ஹரி என்பவரை நியமித்து உள்ளது .அதுவும் இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை என்றபோதிலும் அந்த நிறுவனம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக  ஏற்று கொள்ள  வேண்டிய அவசியம் என்ன. எரிச்சநத்தம் தொலை பேசி நிலையத்தில் 1-10-2017 க்கு பிறகு  புதிதாக பணிக்கு வந்த ஒரு நபரை கார்பொரேட் அலுவலக உத்தரவை மீறி பணிக்கு சேர்த்த அவசியம் என்ன ? நீ ஆடு .நான் நடிப்பது போல் நடிக்கிறேன் என்ற பாணியில் மாவட்ட நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கிறது . இந்த  நிறுவனம் தற்போது 2 ஊழியர்களை பலி வாங்கி உள்ளது .மாநில சங்கத்திற்கு இன்று இந்த தகவலை சொல்லி இருக்கிறோம் . GM (SR ) அவர்களை சந்தித்த பின் மாநில சங்க வழிகாட்டலின் படி ஒரு போராட்டத்தை மாவட்ட சங்கம் நடத்தும் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...