ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும் , உடனடியாக ஊதியத்தை வழங்க கோரியும் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக 2/7/2019 முதல் துவங்கியது .முதல் நாள் உண்ணாவிரதத்தை TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை தாங்க ,அந்த சங்கத்தின் மாநில சங்க நிர்வாகி தோழர் வெளிச்சமின் துவக்கி வைத்தார் .முதல் நாள் உண்ணாவிரதத்தில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் பங்கேற்றனர் .2 நாள் உண்ணாவிரதத்தை BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .3 நாள் உண்ணாவிரதத்தை AIBDPA சங்க மாவட்ட தலைவரும் அதன் மாநில சங்க நிர்வாகியுமான தோழர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார் .3 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை வாழ்த்தி நகர JCTU செயலர் தோழர் தேனீ வசந்தன் , நமது அருமை தோழர் முருகையா அவர்களின் சகோதரரும் ,நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தின் பொறுப்பாளருமான தோழர் மாரிமுத்து AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி மற்றும் SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர் .


























No comments:
Post a Comment