Thursday, July 4, 2019

பாராளுமன்றத்தில் திரு இளமறம் கரீம்

BSNLன் புத்தாக்கத்திற்காக தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என 01.07.2019 அன்று மாநிலங்களவையில் திரு இளமறம் கரீம் அவர்கள் பிரச்சனையை எழுப்பினார். BSNLன் பொருளாதார நிலை கவலைக்கிடமாகவும், நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது தொடர்பாகவும் தெரிவித்ததோடு, மின்சாரக் கட்டணம் கூட அந்த நிறுவனத்தால் கட்டமுடியவிலை என்றும், ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத காலமாக தரப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த மாநிலங்களவையின் தலைவர் திரு வெங்கையா நாயுடு அவர்கள், இது ஒரு முக்கியமான பிரச்சனை என்றும் அது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் அவையில் இருக்கும் சமயத்தில் மாநிலங்களவையில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...