Sunday, June 5, 2016

அருப்புக்கோட்டை கிளை மாநாடு

               அருப்புகோட்டை கிளை மாநாடு 04-06-2016 அன்று மாலை 5 மணி அளவில் தோழர் U .B .உதயகுமார் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது மாவட்டத்தில் நமது வெற்றியின் தன்மை பற்றியும், தற்போது நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு எழும் நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். வாழ்த்துரையாக நமது மாவட்ட செயலர் தோழர் A.சமுத்திரகனி, SNEA அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் மனோகர், ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம், உதவி மாவட்ட செயலர் தோழர் சந்திரசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் U.B. உதயகுமார், A.கண்ணன், A.S.அஷ்ரப் தீன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின்   புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .



















No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...