Wednesday, June 29, 2016

பிரம்மாண்டமான எழுச்சி மிகு உற்சாகமான மாவட்ட மாநாடு

          நமது மாவட்ட மாநாட்டின் 2 நாளான இன்று பொது அரங்க நிகழ்ச்சி உற்சாகமாக தொடங்கியது. மாவட்ட தலைவர் A.சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் முதல் நிகழ்ச்சியாக அதிர் வேட்டுக்கள் வெடிக்க, எழுச்சி மிகு கோஷங்களுடன் தேசிய கொடியை நமது மூத்த உறுப்பினரும் 30/06/2016 அன்று பணி ஓய்வு பெரும் ராஜபாளையம் தோழர் ஸ்ரீனிவாசன் ஏற்றி வைக்க, நமது சங்க கொடியை தோழர் பொன்னுசாமி, ராஜபாளையம் கிளை தோழர் ஏற்றி வைக்க மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிகள் தொடங்கின. சிவகாசி OCB கிளை செயலர் தோழர் M.முத்துசாமி அவர்கள் தியாகிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தனது வரவேற்பு உரையில் கடந்த 27 மாதங்கள் நமது மாவட்டத்தில் சங்க செயல்பாட்டை, 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை,அரசியல் கடமைகளை சரியான பார்வையில் பார்க்காத போக்கை சுட்டி காட்டினார்.மேலும் 8 வது மாவட்ட மாநாட்டை அற்புதமாக நடத்திய சிவகாசி தோழர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும் ,பாராட்டுகளையும் தெரிவித்தார். தோழர்கள் சமுத்திரக்கனி, ஜெயபாண்டியன், முத்துசாமி ,கருப்பசாமி, ராஜமாணிக்கம், முனியாண்டி, ராஜு, குருசாமி ,செல்லம்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அனைத்து சிவகாசி தோழர்களும் கடந்த ஒரு வாரகாலமாக மாவட்ட மாநாட்டு பணிகளை சிறப்புடன் செய்ததை மாவட்ட மாநாடு வெகுவாக பாராட்டியது.

































          மேலும் அனைத்திந்திய மாநாட்டுக்கு நன்கொடையாக ரூபாய் 90,000 வழங்கி ஒட்டு மொத்தமாக நமது மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 1,80,000/- ஐ இன்று அனைத்திந்திய மாநாட்டுக்கு நமது மாநில செயலரிடம் வழங்கி விட்டது. நமது மாவட்ட மாநாட்டை முறையாக நமது தமிழ் மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் நமது சங்கம் பெற்ற இரட்டை ஹாட்ரிக் வெற்றி,சென்னை சொசைட்டி முறைகேடுகளை எதிர்த்து நமது போராட்டம்,அனைத்திந்திய மாநாட்டு பணிகள், செப்டம்பர் 2 போராட்டம் ஆகியவற்றை விரிவாக விளக்கினார். நமது மாநாட்டின் எழுச்சிமிகு நிகழ்வை பாராட்டினார். வாழ்த்துரையாக SNEA மாவட்ட செயலர் உயர்திரு செந்தில்குமார், சேவா (R) மாவட்ட செயலர் தோழர் பரமேஸ்வரன், AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி, சேவா (R) மாவட்ட உதவி செயலர் தோழர் கேசவன், AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் A நாராயணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

       தேனீர் இடைவேளையில் தோழர் மணிமாறனின் பல குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புரையாக மாநில உதவி செயலரும், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு செயலருமான தோழியர் V.P.இந்திரா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். சரிபார்ப்பு தேர்தலில் இருந்து இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் பிரச்சனைகள் அனைத்தையும் விரிவாக பேசினார். பின்னர் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் புதிய நிர்வாகிகள் தேர்வை நமது மாநில செயலர் நடத்தினார். கீழ் கண்டோர் வரும் 2016-2018 ஆண்டுக்கு நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தலைவர்:-A.சமுத்திரக்கனி ,டெலிகாம் டெக்னீசியன்  
உதவி தலைவர்கள் :- 1.R C.ராஜாராம் மனோகரன்  , டெலிகாம் 
  டெக்னீசியன் ,சிவகாசி  
2.G .ராஜு , டெலிகாம் டெக்னீசியன் ,சிவகாசி
3.G.வெங்கடசாமி , டெலிகாம் டெக்னீசியன்,
        ஸ்ரீவில்லிபுத்தூர்
4.T .அனவ்ரதம், டெலிகாம் டெக்னீசியன்,ராஜை

செயலர் :- S.ரவீந்திரன் ,அலுவலக கண்காணிப்பாளர்  
உதவி செயலர்கள்:-1.S.வெங்கடப்பன் ,டெலிகாம் டெக்னீசியன்      விருதை
2.R.ஜெயக்குமார், இளநிலை பொறியாளர்,விருதை
3.L .தங்கதுரை , இளநிலை பொறியாளர், வத்ராப்
4.A.S.அஷ்ரப் தீன், இளநிலை பொறியாளர், அருப்புக்கோட்டை

பொருளாளர் :- C.சந்திரசேகரன் , டெலிகாம் டெக்னீசியன்,விருதை   
உதவி பொருளாளர் :-தோழியர் N. மங்கையர்கரசி, அலுவலக கண்காணிப்பாளர், விருதை

அமைப்புச் செயலர்கள்
1.I .முருகன்,டெலிகாம் டெக்னீசியன் ,ராஜை  
2.T.கணேசமூர்த்தி,இளநிலை பொறியாளர் ,காரியாபட்டி  
   3.N.ராதாகிருஷ்ணன் ,டெலிகாம் டெக்னீசியன்,ராஜை  
   4.H.காதர் மைதீன் ,டெலிகாம் டெக்னீசியன்,சாத்தூர் 
   5.G.சண்முகவேலு ,டெலிகாம் டெக்னீசியன்,சிவகாசி 
   6.R.ராஜமாணிக்கம் , டெலிகாம் டெக்னீசியன்,சிவகாசி 
   7.R.முனியாண்டி , டெலிகாம் டெக்னீசியன்,சிவகாசி 

ஆடிட்டர் :- A.மாரியப்பா டெலிகாம் டெக்னீசியன், விருதை  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...