வாசகர் பக்கம்
'எப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறீர்கள் மிஸ்டர் பி.எம்.' என்று 56 நாள் லீவில் போய் திடீரென வந்து அறிக்கை கொடுத்து அசத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், கிண்டல் செய்யும் அளவுக்கு பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மே 26, 2014 அன்று பிரதமராக பதவி ஏற்ற மோடி கடந்த ஓராண்டில் சாதித்தது என்ன? சந்தித்தது என்ன? சாதனை என்ன? மக்களின் வேதனை என்ன?மோடியின் முதல் கோ(வே)ஷம் தூய்மை இந்தியா. 'கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை எல்லோரும் துடைப்பமும், கையுமாக அலைந்தார்கள் சில நாளைக்கு. சிலர் ஊரில் இருந்த குப்பையை கொண்டு வந்து கொட்டி கூட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். கிரிக்கட் வீரர், நடிகர் மற்றும் கவுன்சிலர் முதல் கலெக்டர் வரை கிளீன் பண்ணியே தீருவது என கங்கணம் கட்டி துடைப்பத்துடன் வீதியில் நின்றது சில நாட்களுக்குத்தான். அப்புறம் அந்த படம் ஏன் பெட்டிக்குள் போனது என தெரியவில்லை. இதனால் அப்போது துடைப்பம் வியாபாரிகள் பயனடைந்தார்கள் எனபது தான் அந்த திட்டம் கண்ட பலன் போலும்.
திடீர் இட்லி, திடீர் போண்டா மாதிரி, திடீர் சாமியார்கள் அவ்வபோது உதிர்த்த கருத்துக்கள் சிரிப்பு வெடி. இந்துகள் குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்பித்து, கோட்சே தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தார், காந்தி காட்டி கொடுத்தார் என்ற அளவுக்கு பேசி, குலுங்க குலங்க காமெடி சரவெடிகள் இந்த ஒருவருடத்தில் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.இவ்வளவு சர்ச்சைகள் இருக்கும் போது மோடி இதை பற்றி நாடாளுமன்றத்தில் வாய் திறக்கவில்லை, 'ஒரு வார்த்த பேச ஒரு வருடம் காத்திருந்தேன்' எனபதை உண்மையாக்கும் வகையில் ஒரு நாள் திருவாய் மலர்ந்தார். சர்ச்சை கருத்துகளுக்கு இடைவேளை விடப்பட்டது. அடுத்து ஏதாவது புது மசோதா தாக்கல் செய்யும் போது திசை திருப்ப இவர்கள் திடீரென தோன்றி பிரச்னை கருத்துகளை பரப்பலாம்.
நன்றி :- விகடன்
No comments:
Post a Comment