Sunday, May 31, 2015

நானே கேள்வி நானே பதில்

''அரசியல்வாதிகளின் வீடுகளில் திருடர்கள் புகுந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா?''
''கேரள முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் இறப்பதற்குச் சில காலம் முன்பு, அவர் குடியிருந்த வாடகை வீட்டில் ஒரு திருடன் புகுந்து, பீரோவில் இருந்த 3,500 ரூபாயைத் திருடிச் சென்றுவிட்டதாக ஒரு செய்தி படித்தேன். ஒரு முன்னாள் முதல்வர் வீட்டில் இருந்தது 3,500 ரூபாய் தானா என்ற ஆச்சர்யம் ஒரு பக்கம். ஒரு முன்னாள் முதல்வர் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆச்சர்யம் இன்னொரு பக்கம். விசாரித்தபோது, பாரம்பரியப் பணக்கார நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு, தன் வீடு, தோட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, வாடகை வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். அவர் அளித்த சொத்தின் மதிப்பு இன்று 10 கோடியைத் தாண்டும். இப்படியும் சில அரசியல்வாதிகள் சில காலம் முன்பு நம்மிடையே வாழ்ந்திருக் கிறார்கள்!''
                         நன்றி :- விகடன் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...