Wednesday, January 23, 2013

காவிரிக்கரையில் கரை கடந்த உற்சாகம்

கலந்து கொண்ட தோழர்கள்
          நமது BSNLEU சங்கத்தின் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 22-01-2013 அன்று திருச்சி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 தோழர்கள்வரை கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள மொத்தம் 239 கிளைச்செயலர்களில் 221 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். தேசியக்கொடியை மாநிலத் தலைவர் தோழர் M.மாரிமுத்து ஏற்றி வைக்க, நமது சங்கக்கொடியை அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார்.

பொதுச்செயலாளர் தோழர் அபிமன்யு

        விவாதத்திற்கான குறிப்புகளைச் சமர்பித்து மாநிலச்செயலர் தோழர் S.செல்லப்பா உரை நிகழ்த்தினார். அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மாறியுள்ள சூழ்நிலையில் புதிய அங்கீகார விதிகளின் அவசியம் பற்றியும் ,BSNL நிறுவனத்திற்கு எதிரான அரசின் கொள்கைகள் பற்றியும், வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மாநில செயற்குழுவில் நமது மாவட்டத்தில் இருந்து 38 தோழர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை கிளைச்செயலர் தோழர் R ஜெயக்குமார் விவாதக்குறிப்புகள் மீதான உரையை முன்வைத்தார். நமது மாவட்டம் சார்பாக அகில இந்திய சங்க கட்டிட நிதியாக ரூ.25,000/- வழங்கப்பட்டது.
மாநிலச் செயலர் தோழர் செல்லப்பா

மாநிலத் தலைவர் தோழர் மாரிமுத்து









No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...