விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் பணி புரியும் தோழியர் V.முத்துலட்சுமி ,ATT அவர்களின் தாயார் நேற்று இரவு காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட மற்றும் கிளை சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Monday, May 27, 2019
Saturday, May 25, 2019
SSA இணைப்பை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
SSA இணைப்பை எதிர்த்து விருதுநகர் மற்றும் சிவகாசியில் AUAB சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்







Wednesday, May 1, 2019
எழுச்சிகரமாக நடைபெற்ற "SAVE BSNL SAVE NATION" பேரணி
இன்று விருதுநகரில் BSNLEU ஊழியர் சங்கம் சார்பாக "SAVE BSNL SAVE NATION" பேரணி மிக சிறப்பாக நடைபெற்றது . விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக துவங்கிய பேரணி மதுரை ரோடு ,உழவர் சந்தை வழியாக பழைய பஸ் நிலையம் முன்பாக நிறைவு பெற்றது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேரணிக்கு முன்பாக தொடக்க உரை நிகழ்த்தினார் .முறையாக பேரணியை மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .எழுச்சி மிகு கோஷங்களை தோழர்கள் சமுத்திரக்கனி ,இளமாறன் ,முத்துசாமி ஆகியோர் எழுப்பினர் .பேரணி நிறைவு பெற்ற பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் இளமாறன் ,ரவீந்திரன்,ஜெயக்குமார் ,சமுத்திரக்கனி சந்திரசேகரன் ஆகியோர் பேரணியின் நோக்கம் குறித்து விரிவாக பொது மக்கள் முன்பாக பேசினர் .ஏராளமான பெண் ஊழியர்கள் உட்பட திரளானோர் பேரணியில் பங்கேற்றனர் .






















Tuesday, April 30, 2019
மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி
இன்று மாவட்ட சங்கம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி கண்டது .இந்த பேட்டியின் போது மாவட்ட செயலருடன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் மாநில அமைப்பு செயலர் தோழர் ,சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .
1.ஊழியர் பற்றாக்குறை இருக்க கூடிய இடங்களில் ஊழியர் நியமனம் செய்யப்பட வேண்டும் .
2. ஸ்ரீவில்லிபுத்தூர் CSC க்கு ராஜபாளையம் பகுதியில் இருந்து போடப்பட்ட மாறுதல் Transfer Policy க்கு முரணாக இருப்பதை சுட்டி காட்டினோம் .ஆதலால் ஊழியர்களை deputation அடிப்படையில் அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டது .ஊழியர்கள் பணி புரிய உகந்த சூழல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இல்லாமல் இருப்பது உடனடியாக சரி செய்யப்படும் என முதன்மை பொது மேலாளர் உறுதி அளித்தார் .
3.மருத்துவ சிகிச்சைக்காக அளிக்கப்படும் Referral லெட்டர் கொடுப்பதில் இருக்கும் நடைமுறைகள் விரிவாக விவாதிக்கபட்டன .அது விசயமாக மாவட்ட செயலருக்கு கொடுக்கப்பட்ட மெமோ மீது நமது கருத்துக்களை விரிவாக முதன்மை பொது மேலாளர் அவர்களிடம் விவாதித்தோம் .தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வன்மம் வைத்து மெமோ வழங்கும் CAO (F ) அவர்களின் நடவடிக்கைகள் மாவட்டத்தின் தொழில் அமைதிக்கு பங்கம் வகிக்கும் என்பதை சுட்டி காட்டி உள்ளோம் .இது விஷயமாக நமது தமிழ் மாநில சங்கத்திற்கும் தகவல் அனுப்பி உள்ளோம் .
4.ஒப்பந்த ஊழியர் இட மாறுதலை உடனடியாக அமல்படுத்த முதன்மை பொது மேலாளர் AGM(Admn) அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் .
5.மருத்துவ பில்களை settle செய்வதில் Visit ரிப்போர்ட் காலதாமதமாய் வருவதை சுட்டி காட்டி உள்ளோம் .
இரங்கல்
விருதுநகர் outdoor கிளை சங்க உறுப்பினர் தோழர் V.லக்ஷ்மணன் ,TT அவர்களின் தாயார் இன்று காலை காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Monday, April 29, 2019
தெருமுனை பிரச்சாரம்
இன்று சிவகாசியில் தலைமை தபால் நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் கிளை செயலர் தோழர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது .இந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,மாவட்ட உதவி தலைவர் தோழர் இன்பராஜ் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா .விருதுநகர் கிளை செயலர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர் .பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .





7 வது மாவட்ட விரிவடைந்த செயற்குழு ,கருத்தரங்கம் மற்றும் தோழர் R .முனியாண்டி அவர்களின் பணி நிறைவு பாராட்டு
7 வது மாவட்ட விரிவடைந்த செயற்குழு ,கருத்தரங்கம் மற்றும் தோழர் R .முனியாண்டி அவர்களின் பணி நிறைவு பாராட்டு
இன்று சிவகாசியில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு , பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் "PROMOTE FTTH SERVICE" என்ற பொருளில் கருத்தரங்கம் நடைபெற்றது .
இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் ,தலைமை தாங்கினார் . தியாகிகளுக்கு ,குறிப்பாக நமது மாநில உதவி செயலர் முருகையா அவர்கள் மறைவிற்கும் , இலங்கை குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்களுக்கும் மாவட்ட துணை தலைவர் தோழர் இன்பராஜ் அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்த அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் . அதன் பின் தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார் .மாவட்ட செயலர் தனது தொடக்க உரையில் இன்று BSNL நிறுவனம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார் .அதே போல் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை விரிவாக விளக்கினார் .நமது மத்திய சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் தெரு முனை பிரச்சார கூட்டங்களை ராஜபாளையம் ,சாத்தூர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,விருதுநகர் மற்றும் சிவகாசியில் நடத்தி உள்ளதை சுட்டி காட்டினார் ,அதே போல் மே தின பேரணியை விருதுநகரில் மாலை 5.30 மணிக்கு மே 1 ஆம் தேதி நடத்த அனைத்து கிளைகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடுத்துரைத்தார் .பின்னர் பணி நிறைவு பெற்ற தோழர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது . பணி நிறைவு பெற்ற தோழர்களை மாவட்ட தலைவர் ,செயலர், மாவட்ட உதவி செயலர் சந்திரசேகரன் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பாராட்டி பேசினர் .அதன் பின் மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி அவர்கள் இன்றைய சூழல் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார் .அதன் பின் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமை வகித்து FTTH பற்றி விரிவாக எடுத்துரைத்தார் .இந்த கருத்தரங்கில் மாவட்ட துணை பொது மேலாளர் உயர் திரு மாரியப்பன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர் .மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .அனைத்து தோழர்களுக்கும் ஒரு இனிய மதிய உணவை வழங்குவதிற்கு தோழர் முனியாண்டி அவர்கள் முழு பங்களிப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது .
































Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...