Thursday, October 24, 2013

பேட்டி

          23-1-2013 அன்று மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளரை பேட்டி கண்டது. கீழ் கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
          1. சிவகாசி பகுதியில் மழையால் 300 க்கும் மேற்பட்ட WiMax இணைப்புகள் பழுதாகி உள்ளன என்பதையும், கடந்த 10 நாட்களாக பழுது சரியாகாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைவில் சரி செய்ய கோரியுள்ளோம்.
          2.ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல சட்டத்தின்  அடிப்படையில் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
          3. நத்தம்பட்டி தொலைபேசி நிலையத்திற்கு ஒரு டெலிகாம் மெக்கானிக் உடனடியாக நியமிக்க வலியுறுத்தி உள்ளோம்.
          4.கார்போரேட்  அலுவலக உத்தரவுகளை அமல்படுத்துவதில் நமது மாவட்டத்தில் விதி மீறல்கள் இருப்பதை சுட்டி காட்டி O B C Union  கூட்டம்  நடத்த 05-09-2013 அன்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை  நாம் மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டிக் காட்டிய போது, பொது மேலாளர் அவர்கள் எதிர  காலத்தில் இது போன்ற அனுமதி வழங்க கூடாது  என அதிகாரிகளுக்கு வழி காட்டியுள்ளார் .
          அருப்புகோட்டை மாறுதல் விசயத்தில் மாறுதல் கொள்கைக்கு மாறுபட்ட எந்த முடிவையும் நமது சங்கம் ஏற்று கொள்ளாது எனத் தெளிவாக கூறிவிட்டோம்.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா " ----மஹா கவி பாரதி

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...