
Wednesday, August 7, 2019
கடலூரில் நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு
கடலூரில் 5-8-2019 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைளை கண்டு தொய்வடைந்த தோழர்களுக்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது . BSNL உருவாகிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் BSNL நிறுவனத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையையும் முறியடித்த வரலாறை மிக நேர்த்தியுடன் அற்புதமாய் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார் .நமது மாவட்டத்தில் இருந்து அனைத்து கிளை செயலர்கள் கலந்து கொண்டனர் .நமது மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை தோழர் கண்ணன் அவர்கள் அச் செயற்குழுவில் உரை நிகழ்த்தினார் .









இன்று விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக அனைத்து கிளைகளிலும் கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
(1) Honour the commitments given by the Union Cabinet in the year 2000, to ensure BSNL’s financial viability. (a) Extend immediate financial support to BSNL, for the maintenance of the services. (b) Extend soft loan to BSNL for it’s capital expenditures. (2) Remove the total ban imposed on capital expenditure by BSNL. Allow field units to carry out capital expenditure, were revenue is assured. (3) No retrenchment. Honour the commitment given on job security at the time of formation of BSNL.







Monday, July 29, 2019
இரங்கல்
தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில் கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் .குத்தாலகனி அவர்கள் நேற்று மாலை காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Thursday, July 25, 2019
பொது மேலாளருடன் நேர்காணல்
நமது மாவட்ட சங்கம் இன்று தூத்துகுடியில் நமது மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களை சந்தித்தது. இன்றைய (25/07/2019) பேட்டியின்போது மாவட்ட செயலருடன் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன், மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .இன்றைய பேட்டியின்போது ஊழியர் நலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் வருமானத்தை அதிகரிப்பது விசயமாக பேசப்பட்டது. வரும் நாட்களில் நமது BSNLEU சங்கம் சிம் விற்பனை மற்றும் FTTH கொடுப்பது விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று உறுதி அளித்தோம். கீழ் கண்ட விஷயங்களை விவாதித்து உள்ளோம்.
1. Welfare சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு Nodal அதிகாரியாக திரு .செந்தில்குமார் AGM செயல்படுவார் .
2. மருத்துவ சிகிச்சைக்கு referral வாங்குவதற்கு எந்த ஊரில் இருந்தும் தூத்துக்குடி அலுவலகத்திற்கு FAX அனுப்பி referral லெட்டர் தூத்துக்குடி intranet இல் வெளியிடப்படும் என்று GM உறுதி அளித்து உள்ளார் .அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .
3. நமது மாவட்டத்தில் பணி நிறைவு பெறும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நிர்வாகத்தரப்பில் நடத்தப்படும் பணி நிறைவு விழா நமது மாவட்டத்திலேயே நடைபெறும் என்றும் அதை DGM (CFA), விருதுநகர் நடத்துவார் .
4. பென்ஷன் பேப்பரை சமர்ப்பிக்கும் ஊழியர் தூத்துக்குடிக்கு அனுப்பும் முன்னர் அதை check பண்ணி கொடுக்கும் பொறுப்பு ஒரு கணக்கு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.
5. சிவகாசி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தரைவழி இணைப்புகள், பிராட் பேண்டு இணைப்புகள் மற்றும் circuits இருப்பதையும் வருமானத்தில் அதிகம் இருப்பதையும் சுட்டி காட்டி உள்ளோம். ஓய்வு வயது குறைப்பு என்று வந்தால் அங்கு ஒரு ஊழியர் தான் இருப்பார் என்று சுட்டி காட்டி உள்ளோம் .
6. நெட்ஒர்க் பகுதியில் ஊழியர் பற்றாக்குறையை சுட்டி காட்டி உள்ளோம். ஊழியர்கள் உபரியாக உள்ள பகுதியையும் நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். தொலைபேசி நிலையங்களில் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கை ,ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்ய பொது மேலாளர் துணை பொது மேலாளர் ,தூத்துக்குடி அவர்களுக்கு உத்தரவு இட்டுள்ளார் .
7. சிவகாசி பகுதியில் ஒரு Transmission Team உருவாக்க பட வேண்டும் என பொது மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
8. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையான விஷயங்களை பொது மேலாளர் அவர்களிடம் கூறி இருக்கிறோம் .
9. இலாகா குடியிருப்புகளில் வசிக்கும் 3rd பார்ட்டிகளிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வசூல் செய்யாமல் இருப்பதை சுட்டி காட்டி உள்ளோம் .
10. EOI பகுதியில் உள்ள உபரி ஒப்பந்த ஊழியர்களை நெட்ஒர்க், லைன் ஒர்க், சேல்ஸ் மற்றும் CSC பகுதியில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் .
11. பிசினஸ் ஏரியா இணைப்பால் உபரியாக உள்ள ஊழியர் எண்ணிக்கையில் சில தவறுகளை சுட்டி காட்டி உள்ளோம், உபரி ஊழியர்களை பிற section களில் நியமனம் செய்வதை விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
12. மேளாக்கள் மற்றும் ரோடு ஷோக்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து சிம் களை வாங்கி விற்க வேண்டும் என நாம் கூறியதை நிர்வாகம் ஏற்று கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டது.
நேர்காணலில் ஒத்துழைத்த பொது மேலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் நன்றிகள்.
Tuesday, July 16, 2019
எழுச்சிகரமாக நடைபெற்ற சென்னை தர்ணா
பல மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும் ,ஆட் குறைப்பு திட்டத்திற்கு எதிராகவும் இன்று சென்னையில் தர்ணா எழுச்சிகரமாக நடைபெற்றது .நமது மாவட்டத்தில் இருந்து 41 தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் ,பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .





Friday, July 5, 2019
ஆர்ப்பாட்ட காட்சிகள்
ஜியோவின் பொய் பிரச்சாரத்தை கண்டித்து இன்று விருதுநகர் மாவட்டத்தில் AUAB சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் .இன்றைய ஆர்ப்பாட்டத்தில் SNEA மற்றும் AIBSNLEA அதிகாரிகள் பங்கேற்றனர் .









Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...