Friday, March 8, 2019

CMD அவர்களுடன் பேச்சுவார்த்தை

AUAB தலைவர்கள் நமது CMD அவர்களுடன் நேற்று மாலை பிப்ரவரி  மாத சம்பளம் அணைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பட்டுவாடா செய்யாமல் இருப்பது விசயமாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுப்பது  விஷயமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது நமது CMD அவர்கள் பிப்ரவரி  மாதம் வரை அனைவர்க்கும் GPF ,EPF ,பேங்க் லோன் ,LIC மற்றும்   இதர பிடித்தங்கள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது என்றும் அதனால் சம்பளம் போடுவதற்கு நிதி இல்லை என்றும் ,தற்போது சம்பளம் வழங்க ரூபாய் 700 கோடி ஆகும்  என்றும் ,தற்போது ஒரு நாளைக்கு 70 கோடி வீதம் வருமானம் வருவதாகவும் ,அந்த வருமானத்தில் வைத்து தான் சம்பளம் வழங்க வேண்டியது உள்ளதால் 700 கோடி வந்தவுடன் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்தார் .மேலும் நமது BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு DOT ஒப்புதல் தரவில்லை என கூறினார் .அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி DOT உத்தரவிட்டும் இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார் .இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் AUAB சார்பாக துவங்க இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...