Friday, March 8, 2019

உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

CMD BSNLஐ AUAB தலைவர்கள் 07.03.2019 அன்று சந்திப்பு- தொடர் உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு
07.03.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்ட முடிவுகளின் அடிப்படையில் அன்று மாலையே AUAB தலைவர்கள் BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாகத்தின் தரப்பில் மனிதவள இயக்குனரும் உடன் இருந்தார். பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக AUAB தலைவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் BSNL CMD அவர்களிடம் AUAB தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டிருந்த GPF/EPF, வங்கி தவணைகள் மற்றும் இதர தொகைகள் அனைத்தையும் பிப்ரவரி மாதம் வரையில் BSNL நிறுவனம் முழுமையாக செலுத்தி விட்டதாக CMD BSNL தெரிவித்தார். இதற்கு மேல் ஊழியர்களின் ஊதியத்திற்கு தரவேண்டிய 700 கோடி ரூபாய்களுக்கான நிதி நிர்வாகத்திடம் இல்லையென அவர் தெரிவித்தார். வங்கிகளிடம் இருந்து கடனை பெறுவதற்கு DoT அனுமதிக்காததால், தனது தினசரி வருவாய் வசூலையே BSNL நம்பி இருக்க வேண்டி உள்ளது. தற்போது தினம் ஒன்றுக்கு ரூ.70 கோடி ரூபாய்கள் மட்டுமே வசூலாவதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பத்து நாட்கள் பிடிக்கும். எனினும், விரைவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நிர்வாகம் முயற்சி செய்யும்.பழி வாங்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக கூறுகையில், DoTயின் கறாரான உத்தரவின் படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, BSNL CMD மற்றும் மனிதவள இயக்குனர் ஆகிய இருவரும் தெரிவித்தனர். ஆனால் நிர்வாகம் இதுவரை யாரையும் தண்டிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். BSNL CDA விதிகளில் FR 17A இல்லையென்பதால், தலைவர்களுக்கு FR 17A அடிப்படையில் விளக்கம் கோரும் கடிதம் கொடுத்துள்ளது சரியல்ல என AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த மனிதவள இயக்குனர், இது தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.பிப்ரவரி மாத ஊதியத்தை விரைவில் பட்டுவாடா செய்யவும், பணி முறிவு பிரச்சனையை பரிசீலிப்பதாகவும் CMD BSNL கொடுத்துள்ள உறுதிமொழியின் அடிப்படையில், கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்தை AUAB ஒத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...