Thursday, August 11, 2016

ரோடு ஷோ

மாவட்டம் முழுவதும் நமது BSNLEU தோழர்கள் பெரும் எடுப்பில் ரோடு ஷோக்களில் மூன்று நாட்களாக பங்கேற்றனர் .கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2376   சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .MNP  7 ம் லேண்ட் லைன் 8,பிராட் பேண்ட் 12 WLL 1 பெறப்பட்டு உள்ளன .சிவகாசியில் 10/08/2016 அன்று நடைபெற்ற மேளாவில் நமது தோழர்கள் முருகன் மற்றும் சுப்ரமணியன் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் நடைபெற்ற மேளாவில் 250 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 mnp பெறப்பட்டது .இங்கு நமது தோழர்கள் முத்துராமலிங்கம் ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் ,அனவ்ரதம் ,ராதாகிருஷ்ணன் ,பொன்னுசாமி ,சக்தி மோகன் ,வெள்ளை பிள்ளையார் ,AIBDPA தோழர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர் .சங்கரலிங்கபுரம் மற்றும் கன்னிசேரி புதூரில் நடைபெற்ற மேளாவில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,ராஜேந்திரன் ,தங்கராஜ்  மற்றும் முத்தையா ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 162 சிம்கள் விற்கப்பட்டன .மல்லாங்கிணற்றில் இரண்டாம் நாள் மேளாவில்  தோழர் கணேசமூர்த்தி கலந்து கொண்டார் .சிவகாசியில் இரண்டாம் நாள் மேளாவில் 300 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .தோழர்கள் ராஜமாணிக்கம் ,சமுத்திரக்கனி ,முனியாண்டி ,செல்லம் ,நாகேந்திரன் ,M.கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .வத்ராப் பகுதியில் நமது தோழர் தங்கதுரை பங்கேற்றார் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...