Wednesday, August 10, 2016

பேரணி

புன்னகையுடன் சேவை இயக்கத்தை முழுமையான வீச்சில் கொண்டுபோவதற்கு  FORUM சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஒரு பேரணியை நடத்தவேண்டும் என்ற முடிவை ஒட்டி இன்று விருதுநகர் மாவட்டத்தில் ஒரு எழுச்சிமிக்க பேரணியை விருதுநகர் மாவட்ட FORUM நடத்தியது. 50 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 300 பேர் பேரணியில் பங்கேற்றனர். முறையாக நமது பேரணியை நமது பொது மேலாளர் உயர்திரு திருமதி S.E. ராஜம், ITS அவர்களும், ஸ்டேட் பேங்க் தலைமை மேலாளர் அவர்களும் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.


பேரணியை விளக்கி தோழர்கள் ரவீந்திரன், நாராயணன், செந்தில்குமார், பிச்சைக்கனி, குருசாமி, விக்டர் சாம்சன் ஆகியோர் பேசினர். நமது BSNL நிறுவனத்தின் சேவைகளை விளக்கி நமது சேவையை பயன்படுத்தவேண்டிய அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற விஷயம் சிறப்புமிக்கதுசேவைகளை பற்றி தோழர்கள் மதிக்கண்ணன்,இளமாறன் மற்றும் முத்துசாமி ஆகியோர் விரிவாக பேரணியில் பேசிய வண்ணம் வந்தனர். பேரணியை தலைமை தாங்கி FORUM பொறுப்பாளர்கள் BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார்,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி, மற்றும் அதன் தலைவர் தோழர் நாராயணன், சேவா அமைப்பின் மாவட்ட செயலர் தோழர் பரமேஸ்வரன், அதன் துணை செயலர் தோழர் கேசவன், அதன் முன்னாள் RJCM  உறுப்பினர் தோழர் குருசாமி, AIBSLOA மாநில சங்க நிர்வாகி கனகவேல், BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி, AIGETOA மாநில  சங்க நிர்வாகி விக்டர் சாம்சன் ஆகியோர் வழி நடத்தினர்.

















BSNLEU சங்கத்தின் அனைத்து கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகளில் ஒருவரை தவிர அனைவரும் பங்கேற்றனர். ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன், மாவட்ட தலைவர் இளமாறன், மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி, மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். 4 கோட்ட பொறியாளர்களில் சிவகாசி தவிர்த்து அனைவரும் கலந்து கொண்டது சிறப்புமிக்கது. AIBDPA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி, மாநில பொறுப்பாளர் பெருமாள்சாமி, முருகேசன், முத்தையா ஆகியோர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். தேசபந்து மைதானத்தில் முடிவடைந்த பேரணியில் பொது மக்கள் இடையே தோழர்கள்  மதிகண்ணன், ரவீந்திரன், செந்தில்குமார், பிச்சைக்கனி ஆகியோர் பேசினர். BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் நன்றியுரை கூறி பேரணி கூட்டத்தை நிறைவு செய்தார். மாவட்டத்தின் நிகழ்வுகளில் ஒரு புதிய அத்தியாயம் படைத்த அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள், FORUM அமைப்பின் தலைவர்கள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...