Wednesday, April 22, 2015

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் 90 சதவீதம் பேர் பங்கேற்பு

தினத்தந்தி செய்தி
 

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி விருதுநகரில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
கோரிக்கை:-
அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பல்வேறு கோரிக் கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சேவை விரிவாக்கத் திற்கு தேவையான உபகரணங் களை வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற தரைவழி தொலைபேசி சேவையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும். செல் போன் கோபுரங்களுக்கு என தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்கும் திட் டத்தை கைவிட வேண்டும். இயக்குனர் மட்டங்களில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப வேண்டும். நிலம் உள்பட அனைத்து சொத்துகளையும் பி.எஸ்.என்.எல்.லிடம் ஒப்படைக்க வேண்டும். அலைக்கற்றை கட்டணம் ரூ.6 ஆயிரத்து 700 கோடியை உட னடியாக வழங்க வேண்டும்.மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையை கட்டாயமாக்க வேண்டும். அலைக்கற்றைகளுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், 4–ஜி சேவையை தொடங்க வேண்டும். ஒய்வூதிய பலன்களை மாற்றி அமைக்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 90 சதவீதம் ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும்.புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கை களை பி.எஸ்.என்.எல். தொழிற் சங்கங்கள் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாத நிலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து இருந்தது.
வேலைநிறுத்தம்
அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் இந்த 20 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி வேலைநிறுத்தம் நடந் தது. மொத்தம் 555 ஊழியர் களில் 451 பேர் வேலைநிறுத் தத்தில் பங்கேற்று உள்ளனர். அதாவது 90 சதவீதம் பேர் வேலை நிறுத் தத்தில் பங்கேற்று உள்ளனர். வேலைநிறுத்தம் செய்ததில் 72 பேர் பெண்கள் ஆவார். மேலும் கோரிக்கை களை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தால் பி.எஸ்.என்.எல்.அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

தினமலர் செய்தி

விருதுநகர் : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல் சேவை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும். கிராமபுற தரைவழி தொலை பேசி சேவையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 546 ஊழியர்களில் 392 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 92 பேர் விடுப்பில் சென்றனர். இதனால் 62 பேரை கொண்டு நேற்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் இயங்கியது. நேற்று காலை விருதுநகர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சக்கணன் தலைமை வகித்தார். கன்வீனர் ரவீந்திரன் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் பழுதுகளை சரிபார்க்க முடியாமல் மக்கள் சிரமமப்பட்டனர். வேலைநிறுத்தம் இன்றும் நடக்கிறது. 
imggallery

Tuesday, April 21, 2015

தொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம்

BSNL நிறுவனத்தை பாதுகாப்போம் என கோஷங்களுடன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொடங்கியது வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்தம் .விருதுநகர் மாவட்டத்தில் GM அலுவலகம் , வாடிக்கையாளர் சேவை மையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன .கடந்த பல்வேறு போராட்டங்களை விட வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை இப் போராட்டத்தில் அதிகரித்து உள்ளது .சேவையில் இளைய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும் .அருப்புகோட்டை பகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் FORUM தலைவர்களுக்கு உள்ளது .
மூடப்பட்ட சிவகாசி OCB தொலைபேசி நிலையம்
 
மூடப்பட்ட சிவகாசி CSC


மூடப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அலுவலகம்
 


 விருதுநகர் GM அலுவலகம்
 
ராஜபாளையம் 

மூடப்பட்ட GM அலுவலகம்

Saturday, April 18, 2015

BSNL undertakes Rs 1,000 cr investment plan

State-owned BSNL has undertaken a Rs 1,000 crore investment plan which include launch of Skype facility and setting up of Wi-Fi hotspots at tourist places, a top official said today.
BSNL undertakes Rs 1,000 cr investment plan
"We have taken several measures. Only last week we began migration of landline customers to next generation service facility. It will provide lot of services to customers. Second, we are experimenting with BSNL Skype. Recommended: BSNL to invest Rs 7,000 cr for setting up 3G, 4G wifi hotspots For the Wi-Fi hotspots, 14 centres in tourist places in South zone have been identified," BSNL Director N K Gupta said. "These are the plans which I said entailing Rs 1,000 crore investments.
BSNL undertakes Rs 1,000 cr investment plan
It will take at least five to six months (to roll out)", he told reporters, after launching the fourth Internet Data Centre here established with datacentre infrastructure firm CtrlS. Currently, BSNL has set up such internet data centres in Ahmedabad, Faridabad and Hyderabad. CtrlS will provide the infrastructure facility while BSNL will provide the bandwidth and space for the service. "This is part of revenue sharing between CtrlS and BSNL.
                                 <Courtesy

FORUM தலைவர்களின் மூன்றாம் நாள் சுற்றுப்பயணம்

  போராட்டத்தை விளக்கி FORUM தலைவர்களின் மூன்றாம் நாள் சுற்றுப்பயணம் இன்று அருப்புகோட்டையில் துவங்கியது .அருப்புகோட்டையில் நடைபெற்ற கூட்டதிற்கு தோழர்கள் ராகவன் , NFTE  தோழர் உதயகுமார் ,BSNLEU கூட்டு தலைமை தாங்கினர் .கோரிக்கைகளை விளக்கி  தோழர்கள் கேசவன் ,சேவா BSNL , தோழர் விக்டர் சாம்சன் ,AIGETOA ,ராதாகிருஷ்ணன் ,AIBSNLEA, சக்கணன் , NFTE ,ரவீந்திரன் , BSNLEU , தோழர் மனோகரன் ,SNEA ,தோழர் முனியசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்கம் ஆகியோர் பேசினர் .விருதுநகரில் நடை பெற்ற கூட்டதிற்கு தோழர்கள் சம்பத்குமார் ,NFTE , இளமாறன், BSNLEU கூட்டு தலைமை வகித்தனர் . தோழர்  முருகையா ,BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் சிறப்புரை ஆற்றினார் .

Friday, April 17, 2015

டைம் சரியில்லை


                             நன்றி :- தி ஹிந்து 
கருத்து சித்திரம் 

FORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள்(2 ஆம் நாள் )

FORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள் 2 ஆம் நாளாக இன்று சிவகாசி மற்றும் சாத்தூர் நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது .சிவகாசியில் நடைபெற்ற கூட்டதிற்கு NFTE கிளை செயலர் தோழர் கருப்பசாமி அவர்களும் BSNLEU கிளை தலைவர் R கருப்பசாமி அவர்களும் கூட்டு தலைமை தாங்கினார்கள் .NFTE மாவட்ட செயலர் தோழர் சக்கணன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் , SNEA மாவட்ட செயலர் தோழர் G செல்வராஜ் , தோழர் சின்னமுனியாண்டி ,தோழர் அய்யாசாமி , தோழர் சமுத்திரகனி ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர் . தோழர் ஜெயபாண்டியன் நன்றியுரை கூறினார் .சாத்தூரில் நடைபெற்ற கூட்டதிற்கு SDOT அவர்கள் திரு முத்தையா அவர்கள் தலைமை  தாங்க FORUM தலைவர்கள் அனைவரும் பேசினர் .தோழர் சீதாராமன் ,JTO நன்றி கூற சாத்தூர் கூட்டம் நிறைவு பெற்றது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...