Monday, November 7, 2016

தைரியம் இருந்தால் சொல்லு யார் அந்த இடை தரகர்

ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும்  தன் நியாயமான பிரச்சனைகள் தீர்விற்கு போராட்ட உரிமை இருக்கிறது .ஆனால் தவறான பிரச்சாரம் செய்தால் அதற்கான பதிலை சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது .ஒரு ஊழியர் ஒரு வேலையும் செய்யமாட்டார் என்று நாம் சொல்லவிலலை .அந்த அதிகாரி தான் சொன்னார் .அப்படிப்பட்ட ஒருவர் தன முறையான டெனுரை (வந்து 6 மாதம் தான் ஆகிறது )முடிக்காமல் ஒரு தொலை பேசி நிலையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அந்த தொலைபேசி நிலைய ஊழியர் சிவகாசி அவுட்டோர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார் .அதே போல் ஒரு ஊழியர் விருதுநகர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அவரும் அவர் பணி செய்யும் பகுதியில் டெனுரை முடிக்கவில்லை .மேற்குறிய மாறுதல்களை போடவேண்டும் என்று போராட்டமாம் . இதே வாயால் இவர்கள் RM /TM  கேடர் GM அலுவலக மாற்றலில் மட்டும் இவர் 4 வருடம் முடிக்கவில்லை அவர் முடிக்கவில்லை என்று ஆலாபனை செய்துள்ளனர் .இவர்களுக்கு வேண்டியபடி மாறுதல்கள் போட  வேண்டுமானால் மாறுதல் விதிகளில் மாறுதல் செய்தால் தான் முடியும் .அதே போல் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு immunity கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இல்லை .ஆனால் தொலை தூர மாறுதல்கள் போட்ட பின்பு ஜூன் மாதம் முதல் விருப்பம் இல்லாமல் யாரையும் மாற்றல் செய்யமுடியாது என்று விதி தெளிவாக கூறுகிறது . பதிலுக்கு எந்த ஊழியரையும்  நியமனம் செய்யாமல்  தொலைபேசி நிலையங்களை (வீரசோழன் மற்றும் பரளச்சி )மூடி விட வேண்டுமாம் இவர்களுக்கு .BSNL வளர்ச்சிக்கு இவர்களால் ஆன கைங்கரியம் இது தான் .அதோடு நமது BSNLEU சங்கத்திற்கு வால்பிடிக்கும் நிர்வாகம் என்று வேறு கதைக்கிறார்கள் .ராஜபாளையம் தொடங்கி ,அருப்புக்கோட்டை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பிரச்சனைகளில் ஒரு எழுச்சிமிகு போராட்டம் நடத்தி ஜெயம் கொண்ட சங்கம் நமது சங்கம் .நமக்கு வால் பிடிக்கும் என்று இவர்கள் சொல்லும் அந்த அதிகாரிகள் முன்பாக களம் கண்ட சங்கம் நமது சங்கம் .இவர்களோ  அரசியல் வாதிகளை வைத்து அதிகாரிகள் மேல் புகார் கொடுத்து ஆதாயம் தேட  அலைந்தவர்கள் .அந்த அரசியல்வாதி இவர்களுக்கே  அல்வா கொடுத்தது தனி கதை .புரோக்கர் வேலை பார்க்கிறது BSNLEU சங்கம் அல்ல .தில் இருந்தால் கூறு யார் என்று  . விதிக்கு புறம்பான இவர்கள் மாறுதல்களை எல்லாம் நமது சங்கமும் ஒத்து கொண்டும் கூட ,சாத்தூர் பகுதியில் சேல்ஸ் பகுதிக்கு ஒரு ஊழியர் நியமிக்க பட வேண்டும் என்ற நமது சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையை நிர்வாகம ஏற்று கொள்ள கூடாது என்று இவர்கள் தடை போட்டால் நாம் வேடிக்கை பார்க்கணுமாம் .. இலாகாவின் விதிகள் இவர்கள் தான் என்பது பழைய காலம் .போராட்டத்தில் புடம் போட்ட தங்கம் நமது இயக்கம் .எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது .

                                     நேர்மை என்றும் வெல்லும் .
நிர்வாகம் நடு நிலை  தவறினால் நமது போராட்டம் எப்படி இருக்கும் என்று நமது வலிமையை உணர்த்துவோம் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...