Thursday, January 10, 2019

உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

மல்லி செக்யூரிட்டி நிறுவனம் தன்னிச்சையாக ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து இன்று மாவட்ட சங்கம் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாநில சங்க வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்பட்டு உள்ளது . மீண்டும் உண்ணாவிரத போராட்டம் வரும் 21/01/2019 அன்று முதன்மை மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக பிரமாண்டமாக நடைபெறும் .

தொழிலார் விரோத போக்கை கையாளும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம்

காக்கிவாடான்பட்டியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக செக்யூரிட்டி பணி செய்த திருநாராயணன்  என்ற ஊழியரை எந்தவித தகவலும் இன்றி பணி நீக்கம் செய்து  புதிதாக ஒரு ஊழியரை (அதுவும் காலையில் ஓட்டுநராகவும் இரவில் செக்யூரிட்டி ஆகவும் இரட்டை பணி) அதுவும் குற்ற பின்னணி உள்ளவரை பணிக்கு அமர்த்திய மல்லி செக்யூரிட்டி நிறுவனத்தின் அடாவடி போக்கை பல முறை நிர்வாகத்தோடு பேசியும் நிர்வாகம் அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்யும் போக்கை கண்டித்து மாவட்ட செயலர் வரும் 10 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளார் . இப் பிரச்சனையை மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .ஏற்கனவே இந்த நிறுவனம் இன்னோவேடிவ் நிறுவனம் போல் ஊழியர்களுக்கான EPF ,ESI பணத்தை முறையாக செலுத்தாததால் நாகர்கோயில் மாவட்டத்தில் show cause நோட்டீஸ் இந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது . எல்லாம் தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் மௌனம் காப்பது யாரை காப்பாற்ற என்று தெரியவில்லை . 
தொடர் உண்ணாவிரத போராட்டம் 
 10/01/2019 காலை 1000 மணி 
அணி திரள்வோம் . மல்லி  செக்யூரிட்டி நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து 

Saturday, January 5, 2019

ஜனவரி 8,9 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வரும் ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்த விளக்க  கூட்டங்கள் நடைபெற்று  வருகின்றன . டிசம்பர் 29 ஆம் தேதி காலையில் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார் .கிளை செயலர் காதர் அவர்கள் முன்னிலை வகிக்க ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் விளக்க உரை நிகழ்த்தினார் .மாலை ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் தியாகராஜன் தலைமை வகிக்க தோழர் ராதாகிருஷ்ணன்  வரவேற்புரை நிகழ்த்தினார் . ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றியும் ,அதை வெற்றி  செய்யவேண்டிய நோக்கத்தையும் மாவட்ட செயலர் ரவீந்திரன்  விரிவாக பேசினார் . டிசம்பர் 3 முதல் AUAB சார்பாக நடைபெற இருந்த  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஓத்தி வைத்த  காரணங்கள் பற்றி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி பேசினார் .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாடு முடிவுகள் ,அது நடைபெற்ற அம்சங்கள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் .ஜெயக்குமார் பேசினார் .ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் .வேலுச்சாமி ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளை பிள்ளையார் நன்றி நவின்றார் . அதே போல் சிவகாசியில் 31/12/2018 அன்று காலை 10 மணிக்கு  நுழை வாயிற் கூட்டமாக நடைபெற்றது .அதற்கு தோழர் ராஜையா ,கிளை தலைவர் தலைமை வகித்தார் .இங்கும் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி பேசினர் .கிளை பொருளாளரும் ,மாவட்ட சங்க நிர்வாகியுமான தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் அன்று மதியம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  நடைபெற்ற கூட்டத்திற்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .இங்கு தோழர்கள் வெங்கடசாமி ,ரவீந்திரன் , சமுத்திரக்கனி ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர் .GM அலுவலகத்தில் 01/01/2019 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் சிங்காரவேல் தலைமை வகித்தார் . ஆய்படு பொருளை சமர்ப்பித்து கிளை செயலர்கள் தோழர்கள்  இளமாறன் மற்றும் மாரிமுத்து பேசினர் .ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றியும் ,அதை வெற்றி  செய்யவேண்டிய நோக்கத்தையும் மாவட்ட செயலர் ரவீந்திரன்  விரிவாக பேசினார் .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாடு முடிவுகள் ,அது நடைபெற்ற அம்சங்கள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் .ஜெயக்குமார் பேசினார் .மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .02/01/2019 அன்று அருப்புக்கோட்டை கிளை கூட்டத்திற்கு தோழர் உதயகுமார் தலைமை தாங்கினார் .இங்கு போராட்டத்தை விளக்கி தோழர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார் ,மதிகண்ணன் ஆகியோர் பேசினர் .
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: 11 people, including Lazar Jesumariyan, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, including Braja Braja, people sitting, people standing and outdoor
Image may contain: one or more people, crowd, wedding and outdoor
Image may contain: 4 people, tree, crowd and outdoor
Image may contain: 8 people, including SubbaRao Akula Bsnl Kadapa and Mani Pattabi, people sitting and people standing
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 4 people, including Chandrasekar Selvi, people smiling, people standing
Image may contain: 5 people, including Putumbaka Asokababu, people standing, tree, child and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting, table, child, tree and outdoor
Image may contain: 1 person, outdoor
Image may contain: 2 people, crowd and outdoor
Image may contain: 4 people, including K S Vasan, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting
Image may contain: one or more people, people sitting and outdoor

Thursday, December 20, 2018

BSNLEU புதிய நிர்வாகிகள்

நடந்து முடிந்த அகில இந்திய மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

புதிய நிர்வாகக்குழுவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU’வின் வாழ்த்துகள்.

Thursday, December 13, 2018

Tuesday, December 11, 2018

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு அக்டோபர்  மற்றும் நவம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இன்று மாவட்டத்தில் அனைத்து  கிளைகளிலும் கருப்பு துணியால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Image may contain: 2 people, people standing, tree and outdoor
Image may contain: 4 people, people smiling, people standing, tree and outdoor
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, including Chellappa Chandrasekar, people standing and outdoor
Image may contain: 4 people, including Chellappa Chandrasekar, people standing
Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: 2 people, people standing and outdoor

Tuesday, December 4, 2018

பேச்சுவார்த்தையின் சாராம்சங்கள்

03/12/2018 அன்று நடந்த நமது இலாக்கா அமைச்சருடன் 
அனைத்து சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை முடிவுகள்.
நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
4G அலைக்கற்றை ஒதுக்கீடு
----------------------------------------------
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
சம்பந்தமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் பெறப்படும்.
இதற்கான பணியை செய்து முடிக்க
DOTயின் மூத்த அதிகாரி ஒருவர்
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
ய்வூதிய மாற்றம்
-------------------------------
ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்
இனி யாதொரு சம்பந்தமில்லை.
ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இணைக்கப்படாது.
ஓய்வூதியப்பங்களிப்பு
-------------------------------------
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்
ஓய்வூதியப்பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு
BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
--------------------------------------------------------
கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு
-----------------------------------
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
மார்ச் 2019 முதல் கூடுதலாக
3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.
நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.
புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..
---------------------------------------------------------------
BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘
உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுத்திட.
DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.
3வது ஊதிய மாற்றம்
---------------------------------
BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான
3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி
BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து
உருவாவதற்கு கூடுதல்
கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே ஊதியமாற்றத்தில்
நல்லதொரு முடிவினை எட்டிட…
BSNL மற்றும் DOTக்கு
கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய
அவசியம் இருப்பதால்
டிசம்பர் 10 அன்று நடத்தவிருந்த
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை
மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட
அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தோழர்களே…
நாடு முழுவதும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்திற்கு
முழுமுனைப்புடன் ஊழியர்களையும் அதிகாரிகளையும் தயார்படுத்தியது.
மிகச் சில தோழர்களும்
மிகச்சிறிய அமைப்புகளும் மட்டுமே…
போராட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
மிகப்பெரும்பகுதி தோழர்கள் போராட்ட உணர்வோடு
களம் காண கடமை உணர்வோடு காத்திருந்தனர்.
உரிமை உணர்வு மிக்க தோழர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்….
அனைத்துக் கருத்து வேற்றுமைகளையும் மறந்து….
ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து…
இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு….
போராட்டம் இல்லாமலேயே…
ஊதியமாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம்
என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி…
அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து..
இழுத்தடிக்கப்பட்ட
ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்தி..
நேரடி ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பைக் கூடுதலாக்கி…
மிகப்பெரும் சாதனைகளை…
கத்தியின்றி இரத்தமின்றி…
போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த…
நமது தலைவர்களுக்கும்
AUAB கூட்டமைப்புக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்….
இனி… ஊதியமாற்றம் என்ற
நமது ஒற்றைக்கோரிக்கை மட்டுமே
நம் முன்னே எதிர்நிற்கின்றது…
அதையும் நாம் வென்றாக வேண்டும்

உரிமைகள் மறுக்கப்படுமாயின்…
போராட்டம் என்ற போர்வாள்…
உயிர்த்தெழும்… உயர்ந்தெழும்….
இதுவே நமது பாரம்பரியம்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...