சிவகாசி கிளைகளின் கூட்டு கூட்டம் இன்று (15-11-2014) கிளை தலைவர் தோழர் .அழகுராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .அகில இந்திய மற்றும் மாநில மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பையும் ,நவம்பர் 27 ஆம் தேதி 30 அம்ச கோரிக்கைகளுக்காக நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டிய அவசியத்தையும் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரனும் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனியும் விரிவாக விளக்கி கூறினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி அரசியல் நிகழ்வுகளை கூறி வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கினார் . தோழர் ராமசந்திரன் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை கூறினார் .Innovative நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய கோரி இரண்டு மாவட்ட சங்கங்களும் இணைந்து வரும் 27 ஆம் தேதி மாவட்டம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கான முறையான கடிதத்தை நிர்வாகத்திடம் மாவட்ட சங்கம் கொடுத்து விட்டதை தோழர் ரவீந்திரன் அக் கூட்டத்தில் நினைவு படுத்தினார் . தோழர் இன்பராஜ் நன்றி கூறி கிளை பொது குழுவை முடித்து வைத்தார் .
![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10530906_560621884070797_453338589364351767_n.jpg?oh=1626a3bfca53642aea3b960d46dfe26e&oe=54E5E166&__gda__=1427361447_99fbf74b88a3289d9db54d3428828814)
![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10653274_560622007404118_9058658158958423630_n.jpg?oh=8ca3bcca1c51f139ba5fdc4e12984fd8&oe=54D1DA1B&__gda__=1423975111_3d031a606db43a533e2425f1046d5535)
![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/1471403_560622184070767_6082341613256056572_n.jpg?oh=31b6bc15f782f5354902560f14f72d4f&oe=54DF4F58&__gda__=1427472793_981636753224894778d75c542ef9ec1b)
![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/10702042_560621610737491_3453530986173791246_n.jpg?oh=e55519d3ead85287c8893cb16b68fff8&oe=54D74F7C&__gda__=1424134349_7220ced780753ec94e7eae3d0145e2cd)
No comments:
Post a Comment