Wednesday, February 7, 2018

வள்ளல்களாய் மாறிய ராஜபாளையம் கிளை தோழர்கள்

மறைந்த தோழர் முத்துராமலிங்கம் நினைவாக 9 வது விருதுநகர் மாவட்ட மாநாட்டை ராஜபாளையம் மண்ணில் நடத்தவேண்டும் என்ற மாவட்ட சங்கத்தின் முடிவை ஏற்று கொண்ட ராஜபாளையம் கிளையின் பொது குழு கூட்டம் 06/02/2018 அன்று அதன் தலைவர் தோழர் R  தியாகராஜன் தலைமையில் மிக அற்புதமாய் நடைபெற்றது . ஏராளமான தோழர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் R ஜெயகுமார் ,மாநில  அமைப்பு செயலர் தோழர் A சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் G வெள்ளை பிள்ளையார் ,அமைப்பு செயலர்கள் தோழர்கள் முருகன் ,அனவரதம் ,ராதாகிருஷ்ணன் ,ஒப்பந்த ஊழியர் மாநில  சங்க நிர்வாகி தோழர் வேலுசாமி ஆகியோர் பங்கேற்றனர் .மாவட்ட மாநாட்டு நிதியாக ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை சொல்ல வேண்டும் என்ற வேண்டுகோள் வந்த பின் ஒரு 5 நிமிட மௌனத்தை உடைத்து எறிந்து தோழர் பிச்சை அவர்கள் தனது பங்களிப்பாக ரூபாய் 5000 என்று சொன்னவுடன் 22 தோழர்கள் உடனடியாக தங்கள் பங்களிப்பை உற்சாகத்துடன் அறிவித்தனர் . கடையேழு வள்ளல்களை பற்றி கதை படித்த நமக்கு கண்ணெதிரில் 22 வள்ளல்களை  பார்த்த நெகிழ்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க இயலாது .
தோழர் R தியாகராஜன்              Rs .10,000
தோழர் N ,ராதாகிருஷ்ணன்    Rs .10,000
தோழர் P .பிச்சை                          Rs   5,000
தோழர் R ராஜகோபால்              Rs   5,000
தோழர் Tஅனவ்ரதம்                    Rs    5,000
தோழர் G வெள்ளை பிள்ளையார்  Rs .5000
தோழர் K Rரவிச்சந்திரன்                    Rs 5000
தோழர் P .பொன்னுச்சாமி                  Rs 5000
தோழர் C .பொன்ராஜ்                            Rs 5000
தோழர் A மாரிமுத்து                            Rs 5000
தோழர் N ராமசந்திரன்                         Rs 5000
தோழர் N C கணேஷ் போஸ்             Rs 5000
தோழர் G சுப்பையா                              Rs 5000
தோழர் G.காளிதாஸ்                            Rs 5000
தோழர் A .திருப்பதி                               Rs 5000
தோழர் N பிரபு                                          Rs 5000
தோழர் I .முருகன்                                  Rs 5011
தோழர் B .ரவிராஜா                                Rs 4000
தோழர் I.முருகேசன்                              Rs 2001
தோழியர் R செல்வாதேவி                  Rs 5000
தோழர் N அழகர்சாமி                             Rs 5000
தோழர் T .ராமர்                                         .Rs 2000
நமது சங்கத்தின் மீது உள்ள நம்பிக்கையை ,பற்றை அந்ததோழர்கள்   வெளிப்படுத்தியமைக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
வரவேற்பு குழு செயல் தலைவராக தோழர் வெள்ளை பிள்ளையாரும் ,வரவேற்பு குழு செயலராக தோழர் பொன்ராஜ் அவர்களும் ,பொருளார்ஆக   தோழர் அனவரதம் அவர்களும்  உதவி பொருளாளராக தோழர் முருகனும் தேர்நதெடுக்க பட்டனர் .
 Image may contain: 5 people, people sittingImage may contain: 9 people, people sitting

Image may contain: 3 people, people sitting and indoor

Image may contain: 8 people, people sitting and indoor
 Image may contain: 3 people, people sitting and beard

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...