சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு 06-03-2015 அன்று மாலை 05.30 மணி அளவில் தோழர்கள் கணேஷ் போஸ் மற்றும் அழகுராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் ஜெயபாண்டியன் மற்றும் கருப்பசாமி அவர்கள் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கை விவாதங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது . ஆண்டறிக்கையில் உலக சூழல் , BSNLன் இன்றைய நிலை ,அரசியல் சூழல் ஆகிய்வை மிக அழகாக, சுருக்கமாக ,சுட்டி காட்டியது அற்புதமாக இருந்தது . மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக துவக்கி வைக்க ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் அய்யாசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.SDOP கிளை தலைவர் ,செயலர் மற்றும் பொருளராக தோழர்கள் அழகுராஜ், கருப்பசாமி , இன்பராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .OCB கிளைக்கு தோழர்கள் R கருப்பசாமி , ஜெயபாண்டியன் ,கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11054286_614719545327697_185748302043094627_n.jpg?oh=803b22bae72e7138985b7ce057edf0e7&oe=5582AA0D&__gda__=1433643568_77ae1467d74ff2adef96c25b87ef54d1)
![](https://scontent-sea.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/1508520_614719631994355_5020851559191536821_n.jpg?oh=a0b3a8d923e3fdfa3d5787c16a9006b2&oe=55737AE4)
![](https://scontent-sea.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10685545_614719691994349_220629276808295391_n.jpg?oh=ec414b922be3944a6682fbdc757a4d9d&oe=55786E6A)
No comments:
Post a Comment