Saturday, June 29, 2013

மாநில செயற்குழு கூட்டம்

          பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின்  தமிழ்நாடு  மாநில  செயற்குழு கூட்டம் தோழர் K .மாரிமுத்து, மாநில தலைவர் தலைமையில் 29.06.2013 அன்று  நடைபெற்றது. மாநில செயற்குழுவை  தோழர் P.அபிமன்யு, பொது செயலர்  அவர்கள் தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

          தோழர் K.கோவிந்தராஜன், மாநில செயலர், சென்னை தொலைபேசி  அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்பொதுச்செயலர் P.அபிமன்யு  அவர்கள் பேசுகையில்  6வது  சரிபார்ப்பு தேர்தலில் நமது  வெற்றியின்  சிறப்பம்சங்களையும், 78.2%IDA இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் முக்கிய   பங்கையும் விவரித்தார் 6ஆவது சரிபார்ப்பு தேர்தலுக்குப்பின் புதிய சூழல் உருவாகி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

          பிஎஸ்என்எல் திறன் மேம்படுத்த நாடுதழுவிய பிரசாரம் நடத்த JOINT  FORUM  முடிவு செய்து வரும் 03.08.2013 அன்று புதுதில்லியில்  தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கூறினார். 03-07-2013 முதல் நெய்வேலி  ஊழியர்கள் பங்கு   விற்பனைக்கு எதிராக செய்யவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு  ஆதரவாக 04-07-2013 அன்று அனைத்து  கிளைகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திக்கு : CLICK HERE

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...